பக்கம் : 876
 
 
1403. அணியமு மாரமுங் கொடிஞ்சுங் கோலுமாத்
துணிவினைக் கவனமாத் துரக்கும் பாகரா
மணியவிர் தேரெனு மதலை நாயகர்
பணிவருங் குருதிநீர்ப் பவ்வத் தோட்டினார்.
 
     (இ - ள்.) அணியமும் ஆரமும் கொடிஞ்சும் கோலுமா - மரக்கலத்திற்குரிய
அணியமும் ஆரமுமாகத் தேரின் கொடிஞ்சையும் கோலையும்கொண்டு, துணிவினை கவனமா
துரக்கும் பாகரா - தெளிந்த தொழிற்றிறமுடைய புரவிகளை மீகான்களாகக்கொண்டு, மணி
அவிர் தேர்எனும் - மணிகள் விளங்கும் தேர் ஆகிய மரக்கலங்களை, நாயகர் -
தலைவர்கள், பணிவு அரும் குருதிநீர்ப் பவ்வத்து ஓட்டினார் - குறைதலில்லாத குருதியாகிய
நீரையுடைய கடலிலே செலுத்தா நின்றனர்,
(எ - று.)

     அணியம் ஆரம் என்பன மரக்கல உறுப்புக்கள். மீகான் - மரக்கல மியக்குவோன்.
மதலை - மரக்கலம்.

     குருதிக் கடலுள் குதிரைகள் மாலுமிகளாக, தேர்வீரர்களாகிய மரக்கலத் தலைவர்கள்
தம் தேர்களாகிய மரக்கலங்களை இயக்கினர் என்க.

(273)

 
1404. நுதலிய 1செருநில நொறிற்செந் நீரினுண்
முதலையின் முதுகென நிவந்த தோற்பரங்
கதலிகை காம்பொடு 2கடுகித் தாமரை
3மதலையந் தாளணை வாளை போன்றவே.
 
     (இ - ள்.) நுதலிய - குறிக்கப்பட்ட, செருநிலம் - போர்க்களத்தில், நொறில் -
விரைந்த செலவினையுடைய, செந்நீரினுள் - குருதி வெள்ளத்தூடே, முதலையின் முதுகு என
நிவந்த - முதலையின் முதுகுபோன்று உயர்ந்தனவாகிய, தோற்பரம் - கேடகம், கதலிகை
காம்பொடு கடுகி - கொடிகளின் கழிகளோடு நெருங்கி, தாமரை - தாமரைமலரின்,
மதலையந்தாள் அணை - ஊற்றுக்கோலாகிய நாளத்தை அணையாநின்ற, வாளைபோன்ற -
வாளை மீன்களை ஒத்தன, (எ - று.)

     தோற்பரம் கதலிகைக் காம்பொடு கடுகித் தாமரைத் தாளணை வாளை போன்ற என
இயைக்க. தோற்பரம் - கிடுகு. மதலை - சார்பு - ஊற்றுக்கோல்.
 

(274)

 

1405.

கைவரை யொழுகிய கணையம் பாய்ந்துதம்
மெய்வரை 4நிரைத்திட வீந்த யானைகள்
 

     (பாடம்) 1செருநிலக் குருதி. 2கடுங்கித். 3மதலையுந். 4திரைத்திட விழுந்த.