பக்கம் : 876 | | | 1403. | அணியமு மாரமுங் கொடிஞ்சுங் கோலுமாத் துணிவினைக் கவனமாத் துரக்கும் பாகரா மணியவிர் தேரெனு மதலை நாயகர் பணிவருங் குருதிநீர்ப் பவ்வத் தோட்டினார். | (இ - ள்.) அணியமும் ஆரமும் கொடிஞ்சும் கோலுமா - மரக்கலத்திற்குரிய அணியமும் ஆரமுமாகத் தேரின் கொடிஞ்சையும் கோலையும்கொண்டு, துணிவினை கவனமா துரக்கும் பாகரா - தெளிந்த தொழிற்றிறமுடைய புரவிகளை மீகான்களாகக்கொண்டு, மணி அவிர் தேர்எனும் - மணிகள் விளங்கும் தேர் ஆகிய மரக்கலங்களை, நாயகர் - தலைவர்கள், பணிவு அரும் குருதிநீர்ப் பவ்வத்து ஓட்டினார் - குறைதலில்லாத குருதியாகிய நீரையுடைய கடலிலே செலுத்தா நின்றனர், (எ - று.) அணியம் ஆரம் என்பன மரக்கல உறுப்புக்கள். மீகான் - மரக்கல மியக்குவோன். மதலை - மரக்கலம். குருதிக் கடலுள் குதிரைகள் மாலுமிகளாக, தேர்வீரர்களாகிய மரக்கலத் தலைவர்கள் தம் தேர்களாகிய மரக்கலங்களை இயக்கினர் என்க. | (273) | | 1404. | நுதலிய 1செருநில நொறிற்செந் நீரினுண் முதலையின் முதுகென நிவந்த தோற்பரங் கதலிகை காம்பொடு 2கடுகித் தாமரை 3மதலையந் தாளணை வாளை போன்றவே. | (இ - ள்.) நுதலிய - குறிக்கப்பட்ட, செருநிலம் - போர்க்களத்தில், நொறில் - விரைந்த செலவினையுடைய, செந்நீரினுள் - குருதி வெள்ளத்தூடே, முதலையின் முதுகு என நிவந்த - முதலையின் முதுகுபோன்று உயர்ந்தனவாகிய, தோற்பரம் - கேடகம், கதலிகை காம்பொடு கடுகி - கொடிகளின் கழிகளோடு நெருங்கி, தாமரை - தாமரைமலரின், மதலையந்தாள் அணை - ஊற்றுக்கோலாகிய நாளத்தை அணையாநின்ற, வாளைபோன்ற - வாளை மீன்களை ஒத்தன, (எ - று.) தோற்பரம் கதலிகைக் காம்பொடு கடுகித் தாமரைத் தாளணை வாளை போன்ற என இயைக்க. தோற்பரம் - கிடுகு. மதலை - சார்பு - ஊற்றுக்கோல். | (274) | | 1405. | கைவரை யொழுகிய கணையம் பாய்ந்துதம் மெய்வரை 4நிரைத்திட வீந்த யானைகள் | |
| (பாடம்) 1செருநிலக் குருதி. 2கடுங்கித். 3மதலையுந். 4திரைத்திட விழுந்த. | | |
|
|