பக்கம் : 877 | | | | நெய்வரை நீணிலத் தலத்து மேற்பல மொய்வரை முனையடிப் புண்ட வொத்தவே. | (இ - ள்.) கைவரை ஒழுகிய - கையிடத்திருந்து விடுபட்ட, கணையம் பாய்ந்து எறிதடிகள் புகுந்து, தம் மெய்வரை - தம்முடைய உடலெங்கும், நிரைத்திட - நிரம்புதலானே, வீழ்ந்த யானைகள் - மாண்டுவீழ்ந்த யானைகள், நெய்வரை நீணிலத் தலத்துமேல் - ஊனாகிய நெய்ப்புடைய நீண்ட போர்க்களத்தின் மேலே, பல - பலவாகிய, மொய்வரைமுனை - செறிந்த மலைச்சிகரங்கள், அடிப்புண்ட - புதைக்கப்பட்டன போன்றன, (எ - று.) போர்க்களத்தில் கணையம் பாய்ந்து இறந்து வீழ்ந்த யானைகள் மலைச்சிகரங்கள் புதைபட்டுச் சிறிதே தோன்றுவன போன்றன. முனை அடிப்புண்ட - முனைவரையிற் புதையுண்ட என்க. | (275) | | 1406. | ஊடக 1மொளிர்மணி நாகங் கவ்விய நாடக விரிமதி நடுங்கி வீழ்வபோல் ஆடக மணி2யவிர் கடகக் கையொடு கேடகந் திசைதிசை கிளர்ந்து வீழ்ந்தவே. | (இ - ள்.) ஊடும் அகம் ஒளிர்மணி நாகம் கவ்விய - அகத்துள்ளும் ஒளிர்கின்ற மணியையுடைய பாம்பினாலே கவ்வப்பட்ட, நாள்தக விரிமதி - பூரணை - நாளுக்குப் பொருந்த முழுதும் விரிந்த முழுத்திங்கள், நடுங்கி வீழ்வபோல் - நடுக்கமுற்று வீழ்வதைப்போன்று, ஆடகம்மணி அவிர்கடகக் கையொடு - பொன்னாலும் மணியாலும் விளங்குகின்ற கடகம் செறித்த கையோடே, கேடகம் - கிடுகுகள், திசைதிசை - திக்குகடோறும், கிளர்ந்து - ஒளி பரப்பிக்கொண்டு, வீழ்ந்தவே - வீழலாயின, (எ - று.) அற்ற கையுடன் கிடுகுப் படைகள் வீழ்வன, கவ்விய பாம்போடே வீழும் திங்களை ஒத்தன என்க. | (276) | | 1407. | துளைப்படு புண்ணுமிழ் 3சோரி பாய்ந்தெழக் களிப்படு சிலம்பின கவந்த மாடுவ முளைப்புடை முடைத்திடை சுடர மூட்டிய விளக்கிடு 4குற்றியின் விரிந்து தோன்றுமே. | (இ - ள்.) துளைப்படு புண்உமிழ் - படைகள் பாய்ந்த துளைகளையுடைய புண்கள் காலுகின்ற, சோரி - குருதி, பாய்ந்து எழ - பொங்கி எழாநிற்ப, களிப்படு சிலம்பின - களித்து ஆரவாரமுடையனவாய், | |
| (பாடம்) 1மெரிமணி. 2நகை. 3குருதி. 4குறியின. | | |
|
|