பக்கம் : 878
 

     கவந்தம் ஆடுவ - குறைப்பிணங்கள் ஆடுகின்ற காட்சி, முளைப்பு
உடைமுடைத்திடை - தோன்றுதலையுடைய ஊன் குவியலாகிய திடரின்மேல், சுடரமூட்டிய
- ஒளிரும்படி கொளுத்திய, விளக்கிடு குற்றியின் - விளக்குகள் வைக்கப்பட்ட தண்டுகள்
போன்று, விரிந்து தோன்றுமே - தலையிடத்தே விரிவுடையனவாய்க் காணப்படும், (எ - று.)

     முடை - ஊன் - திடை - திட்டை : விகாரம்; திடர்.

     குருதி பொங்க நின்று ஆடும் குறைத்தலைப் பிணங்கள், விளக்குத் தண்டுபோல்
தோன்றின என்க.

(277)

 

விசயன் போர் மாண்பு

1408. அஞ்சல ரமர்க்கள மென்னு மார்வயல்
விஞ்சையர் குருதிநீர் வெள்ளந் 1தேர்த்தெழ
வெஞ்சின நாஞ்சிலா லுழுது வெள்ளியான்
தஞ்சமார் தன்புகழ் தயங்க வித்தினான்.
 
     (இ - ள்.) அஞ்சலர் - பகைவர்களுடைய, அமர்க்களம் என்னும் - போர்க்களம்
என்கிற, ஆர்வயல் - பொருந்திய வயலிடத்தே, விஞ்சையர் குருதிநீர் வெள்ளம் தேர்த்து
எழ - விச்சாதரருடைய குருதியாகிய நீர்ப்பெருக்குத் தேங்கிப் பெருகாநிற்ப, வெஞ்சின
நாஞ்சிலால் உழுது - தனது வெவ்விய சினமுடைய கலப்பைப்படையாலே பலசால்
உழுதலைச்செய்து, வெள்ளியான் - விசயன் என்பான், தஞ்சம்ஆர் தன்புகழ் - பிறர் தஞ்சம்
புகுதற்குக் காரணமான தன் புகழாகிய வித்தை, தயங்க வித்தினான் - விளங்கும்படி
விதைத்தான், (எ - று.)

     விசயன், பகைவருடைய போர்க்களமாகிய வயலிலே விச்சாதரருடைய குருதிநீரைப்
பாய்ச்சித் தனது கலப்பையாலே உழுது புகழாகிய விதையை வித்தினான் என்க.

(278)

 

அச்சுவகண்டன் தம்பியர் ஈண்டுப் போர்செய்வான்
யாவன் எனல்

1409. வெளியவன் 2மிளிர்மரை புரையுஞ் செங்கணான்
3அளியின னமர்க்களங் கடாக்கொள் கின்றவவ்
விளையவன் யாரென வினவிக் கேட்டனர்
கிளையமர் கிரீவனுக் கிளைய வீரரே.
 
 

(பாடம்) 1தொத்தெழ. 2றாமரை. 3அளியில. சூ. -56