பக்கம் : 879
 

     (இ - ள்.) வெளியன் - வெள்ளைநிறம் உடையானும், மிளிர்மரை புரையும்
செங்கணான் - திகழ்கின்ற செந்தாமரை மலரை ஒத்த சிவந்த கண்களை உடையானும்,
அளியினன் - நம்மால் இரங்கத்தக்கானும், அமர்க்களம் கடாக்கொள்கின்ற, போர்க்களத்தே
5கடாவிடுகின்றவனும் ஆகிய, அவ் விளையவன் யார் - அந்த இளமை மிக்கோன்
யாவனோ, என வினவிக் கேட்டனர் - என்று வினவினார், கிளை அமர் - சுற்றத்தாரை
விரும்புகின்ற, கிரீவனுக்கு இளையவீரர் - அச்சுவகண்டனுக்குத் தம்பியர் ஆயினோர்,
 (எ - று.)

     கடாவிடுதல் - துவைத்தல். வெள்ளை நிறமுடையவனும் செங்கணானும் நம்
இரக்கத்திற்குரியவனும் பெரும்போர் ஆற்றுபவனுமாகிய இவன் யாரென அச்சுவகண்டன்
தம்பியர் விசயனைச் சுட்டித் தம் மயலோரை வினவினர் என்க.

     அளியினன், என்றார் தம்மாற் கொலையுண்பான் என்பது தோன்ற.
விசயன் எனக் கேட்டலும் நால்வரும் ஒருங்கே வருதல்

 

(279)

1410.  சுரமைய ரதிபதி 1தோமின் மாக்களுள்
பெரியவ னிவனெனப் 2பிறந்த செற்றமோ
டெரியவிர் 3வெகுளியா ரிளைய 4காளையிங்
கொருவன்மே னால்வரும் யானை யோட்டினார்.
 
     (இ - ள்.) சுரமையர் அதிபதி - சுரமைநாட்டினரின் மன்னனாகிய பயாபதியினுடைய,
தோம் இல் மாக்களுள் - குற்றமற்ற மக்கள் இருவருள்ளே; பெரியவன் இவன் - மூத்தமகன்
விசயன் என்பானே இவன், என - என்று அறிந்தோர்கூற, பிறந்தசெற்றமோடு - எழுந்த
பகையினோடே, எரிஅவிர் வெகுளியார் - தீக்காலும் சினமுடையராய், இங்கு -
இவ்விடத்தே, ஒருவன் மேல் - இளவிசயன் ஒருத்தன்மேல், இளைய காளை நால்வரும் -
நீலகண்டன் முதலிய நான்கு தம்பிமார்களும். யானை ஓட்டினார் - தத்தம் யானையைச்
செலுத்தினார், (எ - று.)

     மாக்கள் - மக்கள் என்னும் முறைப்பெயர் முதனீண்டது.

     அவ்வாறு வினவியவர் இவன் விசயன் என அறிந்தவுடன் நால்வரும் ஒருங்கே தத்தம்
யானைகளை விசயன்மேல் வெகுண்டு செலுத்தினர் என்க.

(280)

 

விசயனை அந்நால்வரும் வளைத்துக் கோடல்

1411 இரத்தின கண்டனு மேனை வீரரும்
வரைத்தனர் வருபடை வீதி வாயெலாம்
எரித்தனர் நால்வரு மிளைய காளையை
முரித்திடு முனிவின ராகி முற்றினார்.
 
 

     (பாடம்) 1சிறுவன்மார்களுள். 2பிறழ்ந்த. 3வெகுளிய. 4காளையர்.