பக்கம் : 880 | | (இ - ள்.) இரத்தின கண்டனும் - மணிகண்டனும், ஏனை வீரரும் - மற்றைய மறவர்களும், வருபடை - தம்மோடுவரும் படையை, வரைத்தனர் - கூறுபடுத்துக் கொண்டவராய், வீதிவாய் எலாம் - தாம் செல்லும் வழியெல்லாம், எரித்தனர் - தீயால் எரித்தனராய், நால்வரும் - அச்சுவகண்டனுடைய நான்கு தம்பிமார்களும், இளைய காளையை - விசயனை, முரித்திடு முனிவினர் ஆகி - கொன்றுவிடுதற்குரியதொரு பெருஞ்சினம் உடையராய், முற்றினார் - வளைத்துக்கொண்டனர், (எ - று.) ஈண்டும் இளமை பருவங்குறித்து நின்றது. முரித்தல் - அழித்தல்; கொல்லுதல். இரத்தினகண்டன் முதலிய அச்சுவகண்டன் தம்பியர், விசயனைக் கொன்றொழிக்கும் கருத்துடன் சினமிக்கு வளைத்துக்கொண்டனர் என்க. | (281) | | அப்பொழுது விசயன் தோற்றான் என்று ஒரு பொய்ப்பூசல் பரவுதல் | 1412. | அடங்கின னரசிளங் குமர னோவென உடங்கலந் தொல்லொலி யெழுந்த தாயிடை மடங்கலில் கருங்கடன் மலங்கிற் றொத்தது தடங்கமழ் சுரமைநாட் டரசன் றானையே. | இ - ள்) அரசிளங்குமரன் - பயாபதியின் மைந்தனாகிய இளமையுடைய விசயன், அடங்கினன் என - பகைவர்க்குத் தோற்றொழிந்தான் என்று (அப்பொழுதொரு பொய்ச்செய்தி பரவிற்றாக,) ஆயிடை - அப்பொழுது, உடங்கலந்து - ஒன்றுபட்டு ஒல்ஒலி - ஒல் என்னும் ஒரு பேரொலி, ஓஎன எழுந்தது - ஓஓ என்று எழலாயிற்று, மடங்கல் இல் கருங்கடல் - குறைதலில்லாத பெரிய கடல், மலங்கிற்று ஒத்தது - கலங்கியதைப்போன்று கலங்கலாயிற்று, தடங்கமழ் சுரமைநாட்டு அரசன் தானை - குளங்கள் மலர் மணங் கமழாநின்ற சுரமைநாட்டு மன்னனுடைய படை, (எ - று.) இரத்தினகண்டன் முதலியோரால் வளைத்துக் கொள்ளப்பட்டவுடன் விசயன் தோற்றொழிந்தான் என்று ஒரு பொய்ச்செய்தி போர்க்களமெங்கும் பரவிற்று; அதனால் திவிட்டன் சேனை கடல் கலங்கினாற் போன்று கலங்கிற் றென்க. | (282) | | விசயனை, ஓர் அரிமாவும் நாஞ்சிலும் வந்தடைதல் | 1413. | எரிபுரை யுளைகளோ டிலங்கு வெண்பிறை விரிவன வெனவிளங் கெயிற்றொ டாயிடை |
| | |
|
|