பக்கம் : 881
 
  அரியர சடைந்ததொன் றதனை யேறினான்
புரிவகை நாஞ்சிலும் புதிய தெய்தினான்.
 
     (இ - ள்.) எரிபுரை உளைகளோடு - தீப்பிழம்பை ஒத்த பிடரிமயிர்க்கற்றையுடனே,
இலங்கு வெண்பிறை - திகழ்கின்ற வெள்ளிய இளம்பிறை, விரிவன என -
நிலாப்பரப்புதலைப் போன்று, விளங்கு - திகழ்கின்ற, எயிற்றொடு - பற்களுடனே, ஆயிடை
- அப்பொழுது, அரியரசுஒன்று அடைந்தது - ஓர் அரசசிங்கம் விசயனை எய்திற்று,
அதனை ஏறினான் - தெய்வத்தன்மையால் வந்த அச்சிங்கத்தின் முதுகில் விசயன் ஏறி
அமர்ந்தானாக, புரிவகை - மேலும் தான் விரும்பியபடியே, நாஞ்சிலும் - கலப்பைப்
படையும், புதியது எய்தினான் - புதுவதாக ஒன்று தன் கையில் வந்தெய்தப்பெற்றான்,
 (எ - று.)

     அப்பொழுது, ஓர் அரிமாவும் கலப்பைப் படையும் விசயனை அடைந்தன,
அரிமாவினை ஏறி நாஞ்சிலைக் கைக்கொண்டான் என்க. (283)

(284)

 
விசயன் படைஞர் ஆரவாரித்தல்
1414. 1தெய்வவாய் நாஞ்சிலுஞ் செங்கட் சீயமும்
ஐயனாங் கெய்தலு மதிர வார்த்தது
வையமா விளையவன் றானை 2மாற்றலர்
மையன்மா யானைகண் மயங்கி யிட்டவே.
 
     (இ - ள்.) தெய்வம் வாய்நாஞ்சிலும் - தெய்வத்தன்மையுடைய கூர்வாயமைந்த
கலப்பைப்படையும், செங்கண்சீயமும் - சிவந்த கண்களையுடைய அரிமாவும், ஐயன் -
தலைவனாகிய விசயன், எய்தலும் - அடைந்தவுடனே, அதிர ஆர்த்தது - உலகம்
அதிரும்படி முழங்கிற்று, ஆங்கு - அப்பொழுதே, வையம் ஆள் இளையவன் தானை -
உலகினை ஆளுகின்ற விசயனுடைய படை, மாற்றலர் - பகைவர்களுடைய, மையல்மா
யானைகள் - மதமயக்குடைய யானைகள் எல்லாம், மயங்கி இட்டஏ - மயக்கமுற்றன,
(எ - று.)

     நாஞ்சிலையும் அரிமாவினையும் விசயன் எய்தியவுடன் அவன் படை உலகதிரும்படி
ஆரவாரித்தது. மாற்றலர்படையிலுள்ள யானைகள் மயங்கின என்க.

(284)

விசயனின் நாஞ்சிற் போர்
1415 பொருபடை புகைந்தவர் வழங்கு மாயிடைச்
செருவுடை யவரகன் செல்வ மார்பகம்
 
     (பாடம்) 1செய்யவாய். 2மற்றவர்