பக்கம் : 882 | | | உருவுடை நாஞ்சிலா லுழுதிட் டானரோ மருவுடை 1யவர்தமை மயக்கு மைந்தனே. | (இ - ள்.) புகைந்தவர் - பகைவர்கள், பொருபடை - போர்ப் படைகளை, வழங்கும் ஆயிடை - வீசத்தொடங்கியவுடன், செரு உடையவர் - போர்த்தொழிலையுடைய அப்பகைப்படைஞருடைய, அகன்செல்வ மார்புஅகம் - அகன்ற செல்வச் சிறப்புடைய மார்பிடமாகிய வயல்களை, உருஉடை நாஞ்சிலால் - அழகிய தன் கலப்பைப் படையாலே, உழுதிட்டான் - உழுதான், மருவுடையவர் தமை - தன்பால் மருவுதலுடைய நண்பரை, மயக்கும் - மயக்குறுத்தும், மைந்தனே - பேரன்புடைய விசயன், (எ - று.) பகைவர்கள் போர் தொடங்கியவுடன் விசயன் தன் கலப்பைப் படையால் அவருடைய மார்புகளைப் பிளந்தான் என்க. | (285) | | மணிகண்டன் முதலிய நால்வருடனும் கனகசித்திரன் வந்து கூடுதல் | 1416. | ஒருவனோர் நாஞ்சிலா லூழித் தீப்புரை இருவரோ டிருவரை யானை2 நான்கொடு செருவினு ளமர்வெலக் கேட்டுச் சேர்ந்தனன் கருவரை யனையதோட் 3கனக காமனே. | (இ - ள்.) ஒருவன் ஓர் நாஞ்சிலால் - மறவனும் ஒரோ ஒருத்தன், அவன் படையும் ஒரோஓர் கலப்பை, அக்கலப்பையாலே, ஊழித் தீப்புரை - ஊழிக்காலத்துப் பெருந்தீயையே ஒத்த, இருவரோடு இருவரை - தன் சிறு தந்தையராகிய நீலகண்டன் முதலிய நால்வரையும், யானை நான்கொடு - அவர்கள் ஊர்ந்துசென்ற நான்கு யானைகளோடும், செருவினுள் - போர்க்களத்தே, அமர் வெலக்கேட்டு - போர்த்தொழில் செய்து வென்றான் எனக்கண்டோர் கூறக்கேட்டு, சேர்ந்தனன் - வந்து அவர்கட்குத் துணையாய் எய்தினான், கருவரை அனைய தோள் கனககாமன் - அவன் யாரெனில் கரிய மலைபோலும் தோள்களையுடைய கனகசித்திரன் என்னும் காமவேளை ஒப்பான், (எ - று.) தன் இளந்தந்தையர் விசயன்முன் ஆற்றாது வீழ்ந்தமை கண்டு கனக சித்திரன் வந்து எதிர்ந்தான் என்க. | (286) | | கனகசித்திரனைக் கோறல் | 1417 | காளையக் கனகசித் திரனுங் காய்ந்துதன் வாளைவாய் துடைத்தெதிர் மடுப்ப மற்றவன் |
| (பாடம்) 1 யவரையும். 2யாண. 3கனகநாமனே. | | |
|
|