பக்கம் : 885 | | | ஓங்கிருந் தூணியிற் சுடர்ந்த 1தொல்லெனத் தாங்கருந் திறலவன் 2தாரித் தேவினான். | (இ - ள்.) ஆங்கு அவன் அடைதலும் - அவ்வாறு மணிகண்டன் எய்தியவுடனே, அருக்ககீர்த்தி கை - அருக்ககீர்த்தியினுடைய இடக்கை, வாங்குவிற் புகுந்தது - தன் வளைந்த வில்லிடத்தே சென்று பற்றியது, அவன் ஓங்கு இருந்தூணியிற் சுடர்ந்தது வாளிஒன்று - அவ்வருக்ககீர்த்தியின் நீண்டுபருத்த அம்புப்புட்டிலின்கண் இருந்து ஒளிபரப்பிய ஒரு கதிர் அம்பினை, தாங்கரும் திறலவன் - பகைவராற் றடுத்தற்கரிய பேராற்றலுடைய அவ்வருக்ககீர்த்தி, ஒல்லென - விரைந்து, தாரித்து ஏவினான் - வலக்கையில் எடுத்து எய்தான், (எ - று.) அந்நிலையினைக் கண்ட அருக்ககீர்த்தி தன் வில்லை வளைத்துச் சிறந்த கணையொன்றைத் தொடுத்து மணிகண்டன்மேல் எய்தான் என்க. | (291) | மணிகண்டன் இறத்தல் | 1422. | தொடுத்ததுந் துரந்ததும் விடலை தோளிடை மடுத்ததுங் கிழித்தது மண்ணி னுட்புகக் கடுத்ததுங் கண்டுநின் றவர்க டம்மையும் படுத்தது பகலவன் பகழி யென்பவே. | (இ - ள்.) தொடுத்ததும் - அருக்ககீர்த்தி அவ்வம்பினை வில்லிலே தொடுத்ததையும், துரந்ததும் - அதனை ஏவியதையும், தோளிடை மடுத்ததும் - அது மணிகண்டன் தோளிற் பாய்ந்ததையும், கிழித்ததும் - அத்தோளைப் பிளந்ததையும், மண்ணின் உட்புக - நிலத்தில் ஊடுருவிச் செல்ல, கடுத்ததும் - மேலும் விரைந்ததையும், கண்டு நின்றவர்கடம்மையும் - அயனின்று பார்த்திருந்தோரையும், படுத்தது - கொன்றொழித்தது, பகலவன் பகழி என்ப - அவ்வருக்க கீர்த்தியின் அம்பு என்று - அறிந்தோர் உரைப்பர், (எ - று.) அவ்வம்பு, விடுத்ததையும் அது மணிகண்டன் தோள் துணித்ததையும் பின்னர் மண்ணினுட்குளித்ததையும் கண்டு நின்ற பகைவரையும் கொன்றதென்க. | (292) | | 1423. | வரையொடு வரையென 3மறிந்து மண்ணின்மேல் விரையுடை யலங்கலான் வீழு மாயிடைத் | |
| (பாடம்) 1கொல்லெனத். 2சந்தித் தோட்டினான். 3மறித்து. | | |
|
|