அப்பொழுது மணிகண்டன் முதலிய தம்பிமார்களும் கனகசித்திரன் முதலிய மக்களும் ஒருசேர மாண்டார் என்று அச்சுவகண்டனுக்குத் தூதர் உணர்த்தினர்; அத்தூதர் கூறிய சொற்கள் தன் காதில் செம்புருக்கினை வெய்தாய் ஊற்றினாற் போன்று சுட்டது என்க. |
(294) |
|
அச்சுவகண்டன் சண்டவேகையை ஏவி உலகை அழிக்கத் தொடங்கல் |
1425. | ஆங்கவர் மொழிந்த போழ்தி னருவரை கரிய தொப்பான் ஈங்கிவர் மாற்ற 1நன்றீண் டிருந்தினி யென்னை யென்னா வாங்குநீ ருலகில் வாழு முயிர்களை வாரிக் கொண்டு தூங்குநீர்க் கடலுட் பெய்யும் விஞ்சையை விடுக்க2 நேர்ந்தான். |
(இ - ள்.) ஆங்கு - அவ்வாறு, அவர் மொழிந்த போழ்தின் - அத்தூதர்கள் கூறியவுடனே, கரியது அருவரை ஒப்பான் - கருமை நிறமுடைய கடத்தற்கரிய மலையை ஒத்த அச்சுவகண்டன், ஈங்கு இவர் மாற்றம் நன்று - இவ்விடத்தே இத்தூதர்கள் மொழி மிக நன்றாயிருந்தது, ஈண்டு இருந்து இனி என்னை - இவ்விடத்தே இன்னும் இருப்பதனால் யாதுபயன், என்னா - என்று கூறி, வாங்குநீர் உலகில் வாழும் உயிர்களை - வளைந்த கடலாலே சூழப்பட்ட உலகிலே வாழுகின்ற உயிர்கள் அனைத்தையும், வாரிக்கொண்டு - அள்ளிக்கொண்டு சென்று, வீங்கு நீர்க்கடலுள் பெய்யும் - பெருகிய நீரையுடைய கடலின்கண்ணே பெய்தற்குரிய, விஞ்சையை - மாயவித்தையை, விடுக்க நேர்ந்தான் - ஏவுதற்கு இயைந்தனன், (எ - று.) அக் கொடிய செய்தியைக் கேட்ட அச்சுவகண்டன் இவ்வுலகத்தில் வாழும் எல்லாவுயிரையும் இப்பொழுதே கடலிலே வாரிப் போகட்டு விடுவேன் என்று எண்ணி அவ்வாறு செய்தற்குரிய மந்திரத்தைச் சிந்தித்தான் என்க. விஞ்சை - சண்டவேகை என்னும் மாயத் தெய்வத்தை ஏவும் மறை மொழி. |
(295) |
|
சண்டவேகைக்கு அச்சுவகண்டன் பணித்தல் |
1426 | ஓர்ந்தவன் மனத்து விஞ்சை யொருபுடை யெய்த லோடும் சார்ந்தது சண்ட வேகை பணிபணி யென்று சார |
|
(பாடம்) 1மாயி னிருந்தினி. 3 லுற்றான். |