பக்கம் : 888
 
  வார்ந்தநீ ருலகின் வாழு
     மனிதரை வல்லை 1யேகித்
தேர்ந்துகொண் டொருவ ரின்றித்
     2தெய்வமே செகுத்தி டென்றான்.
 
     (இ - ள்.) அவன் - அவ்வச்சுவகண்டன், மனத்து - தன் மனத்தினூடே, விஞ்சை
ஓர்ந்து - அவ்வித்தையைத் தெளிந்து தியானித்து, ஒருபுடை எய்தலோடும் - ஒருபுறத்தே
சார்ந்தவுடனே, சண்டவேகை சார்ந்தது - அவ்வித்தைக்குரிய சண்ட வேகை என்னும் பேய்
ஒன்று அச்சுவகண்டன்பால் எய்திற்று, பணி பணி என்று சார - எனக்குரிய செயலைக்
கூறுக என்று வேண்டி அச்சண்டவேகை தன்னை எய்த, வார்ந்த நீர்உலகின் - நெடிய
கடலாற் சூழப்பட்ட இம்மண்ணுலகத்தே, வாழும் மனிதரை வாழாநின்ற மானிடரை எல்லாம்,
நீவல்லை ஏகி - நீ விரைந்து சென்று, ஒருவர் இன்றித் தேர்ந்துகொண்டு - ஒரு
மனிதனேனும் எஞ்சாமையைத் தெளிந்துகொண்டு, தெய்வமே - தெய்வமாகிய
சண்டவேகாய், செகுத்திடு என்றான் - கொன்றொழிப்பாயாக என்று பணித்தான்,
(எ - று.)

     தெய்வம் : விளி. பணி பணி - பணியைப் பணி - என இரண்டாவது விரிக்க.
தெய்வம் - பணித்திடு ! பணித்திடு ! என்று விரைந்து வர; எனினும் ஆம். அடுக்கு
விரைவுப் பொருளது. மனத்தே மாய மந்திரத்தைத் தியானித்தவுடன் சண்டவேகை பணி
பணி என்று சார, நீ தேர்ந்துகொண்டு மனிதரை ஒருவரின்றிக் கொன்றிடு என்றான் என்க.
 

(296)

 

சண்டவேகை கூற்றுவனுக்குக் கூறல்

1427. கொடியவன் விடுத்த போழ்திற்
     கூற்றுவன் றன்னைக் கூவி
வடியெயி றிலங்க நக்கு
     வாழிய தோள்க 3ளின்று
விடுகதி ராழி வெய்யோன்
     வேண்டவென் வாயுட் பட்டு
4முடியுமிவ் வுலக நீயு
     முறைத்தொழின் முடித்தி யென்ன.
 
     (இ - ள்.) கொடியவன் - கொடுங்குணமுடைய அச்சுவகண்டன், விடுத்த போழ்தில் -
இவ்வாறு சண்டவேகையை ஏவிவிட்டவுடனே, கூற்றுவன் தன்னைக்கூவி - அச்சண்டவேகை
மறலியை அழைத்து, வாழிய தோள்கள் - ஏ கூ.ற்றுவனே உன் தோள்கள் வாழ்க என்று
வாழ்த்தி, வடி எயிறு இலங்க நக்கு - கூரிய பற்கள் ஒளிரும்படி சிரித்து, இன்று -
இற்றைக்கு, விடுகதிர் ஆழி வெய்யோன் - வீசுகின்ற ஒளியையுடைய
 
 

     (பாடம்) 1யாகில். 2தெய்வநீ. 3னின்று. 4முடியுவேயு.