விஞ்சை வேந்தொருவன் என்றது இரத நூபுர நகரத்தரசனாகிய சுவலனசடி யரசனை, தன்மகள் ஒருத்தி என்றது அவன் மகளாகிய சுயம்பிரபையை. கேண்மோ : மோ. முன்னிலையசை. நகை - விளங்குதல்; தொழிற்பெயர். நகு - பகுதி. ஐ - விகுதி. |
( 38 ) |
தூதன் ஒருவன் வருவான் என்றல் |
108. | 1கட்பகர் திவலை சிந்துங் கடிகமழ் குவளைக் கண்ணித் திட்பமாஞ் சிலையி னாய்! நீ 2தெளிகநா ளேழு சென்றால் ஒட்பமா யுரைக்க வல்லா னொருவனோ ரோலை கொண்டு புட்பமா கரண்ட மென்னும் பொழிலகத் திழியு மென்றான். |
(இ - ள்.) பகர் - சொல்லப் பெறுகிற, கள்திவலை சிந்தும் - தேன்துளியைச் சிந்துகின்ற; கடிகமழ்குவளைக் கண்ணி - மணம்வீசும் குவளை மலர்மாலையையும்; திட்பம் ஆம் சிலையினாய் - வலிமை மிக்கதாய வில்லையும் உடைய அரசனே!; நாள் ஏழு சென்றால் - நாட்கள் ஏழுகடந்தால்; ஒட்பம்ஆய் உரைக்கவல்லான் ஒருவன் - விளக்கமாகக் பேசக் கூடிய தூதன் ஒருவன்; ஓர் ஓலைகொண்டு - திருமுகம் ஒன்றைக் கையில் கொண்டு; புட்பமா கரண்டம் என்னும் - புட்பமாகரண்டம் என்று சொல்லப் பெறுகிற; பொழில்அகத்து இழியும் - பொழிலினிடத்திலே வந்து இறங்குவான்; நீ தெளிக என்றான் - நான் கூறியதன் உண்மையை நீ அத்தூதன் வரவைக்கொண்டு தெளிவாயாக என்று உரைத்தான். (எ - று.) ஒருவனென்றது சுவலனசடி யரசனிடத்திலிருந்து தூது வருகின்ற மருசி என்பவனை. திட்பம் ஒட்பம் பண்புப் பெயர்கள். புட்பமா கரண்டம் - போதன நகரத்தையொட்டியுள்ள ஒருபூம்பொழில். புட்பமாகரண்டம் - மலர்ப் பெருங்குடலை என்னும் பொருட்டு. அஃதப் பூம்பொழிற்கு உவமவாகுபெயர் என்க. தூதுரைப்பார்க்குச் சொல்வன்மை இன்றியமையாத தாகலின் ஒட்பமா யுரைக்க வல்லான் என்றார். |
( 39 ) |
|
(பாடம்) 1. கட்பகர் துவலை. 2. தெளிகவேழ்நாள்கள் சென்றால். |