பக்கம் : 891
 

     மலைகளை உருட்டி வந்தது ஒருசூறைக் காற்று, நிரைகிளர் சுடரதாகி நிமிர்ந்தது ஒரு
செந்தீ, திரைகளை மறியவீசிப் பெருகிற்று ஒரு கடல். இச்செயல் எல்லாம் சண்டவேகை
செய்த மாயப் போரென்க.

(300)

 

இதுவுமது

1431. வரைகளு மரனு மண்ணு
     மறித்திடும் வாயு செந்தீப்
புரைகிளர் பொடிக ளாரப்
     1புணர்த்திடும் 2புணர்த்த போழ்தில்
திரைகிளர் பரவை முந்நீர்
     திரைத்துக்கொண் டொழுகு மிஃதால்
உரைகிள ருலகைத் தெய்வ
     முண்ணிய வுடன்ற வாறே.
 
     (இ - ள்.) வரைகளும் மரனும் மண்ணும் மறித்திடும் வாயு - மலைகளையும்
மரங்களையு மண்ணையும் சூறைக்காற்றுப் புரட்டித்தள்ளா நிற்கும், செந்தீ - அந்நெருப்பு,
புரைகிளர் பொடிகள் ஆரப்புணர்த்திடும் - நுண்ணிய துளைகளிலும் செல்லுதற்குரிய
நுண்டுகட்சாம்பராய்ச் சுட்டெரித்துச் சேர்த்திடும், புணர்த்த போழ்தில் - அங்ஙனம்
சாம்பராய்ச் சேர்த்தவுடன், திரைகிளர் பரவை முந்நீர் - அலையெறியும் அகன்ற கடல்,
திரைத்துக்கொண்டு ஒழுகும் - அச்சாம்பர்க் குவியலை அள்ளிக் கொண்டு ஓடாநிற்கும்,
இஃதால் - இத்தன்மைத்து, உரைகிளர் உலகை - பேசுதற்குரிய மானிடர் உலகத்தை,
தெய்வம் உண்ணிய - அச்சண்டவேகை விழுங்கும் பொருட்டு, உடன்ற ஆறு - முயன்ற
வழி, (எ - று.)

     மலைகளையும், மரங்களையும் மண்ணையும் அச் சூறைக் காற்றுப் புரட்டித் தள்ளும்,
இவையிற்றை அச் செந்தீ சாம்பராய் எரிக்கும், அச்சாம்பரை அள்ளிக் கொண்டு அக்கடல்
ஒழுகும். இவ்வாற்றான் அச் சண்டவேகை உலகினை உண்ணலாயிற்று, என்க.
 

(301)

 

இதுவுமது

1432. மருங்கவை புணர்த்த பின்னை
     வானக வளாக மெல்லாம்
கருங்கலொன் றகன்ற மேலாற்
     கவித்தது கவித்த லோடும்
இருங்கலி யுலக மெல்லா
     மிருள்கொள வெருவி நோக்கிப்
பொருங்கலி யரசர் தானை
     போக்கிட மற்ற தன்றே.
 

     (பாடம்) 1புணர்ந்திடும். 2புணர்ந்த.