பக்கம் : 893
 

இஃதென்னென்று திவிட்டன் அருக்ககீர்த்தியை
வினாதலும் அவன் விடை கூறுதலும்

1434. அன்னண முடைந்த போழ்தி
     னருக்கனை முகத்து நோக்கி
என்னிது விளைந்த வாறென்
     றிருங்கடல் வண்ணன் கேட்பக்
கன்னவில் வயிரத் தோளாய்
     காய்ந்தவன் 1விடுக்கப் பண்டு
மன்னுயி ருண்ணுஞ் சண்ட
     வேகை2யாம் வருவ தென்றான்.
 
     (இ - ள்.) அன்னணம் உடைந்த போழ்தில் - அவ்வாறு தன் படை புறமிட்டு
ஓடியபொழுது, இருங்கடல் வண்ணன் - பெரிய கடல் போன்ற நீலநிறமுடைய திவிட்டன்,
அருக்கனை முகத்து நோக்கி - அருக்ககீர்த்தியின் முகத்தைப்பார்த்து, இது விளைந்தவாறு
என் என்று கேட்ப - இவ்வாறு நேர்ந்ததற்குக் காரணம் யாது என்று வினவ, கன்னவில்
வயிரத்தோளாய் - மலையை ஒத்த திண்ணிய தோளையுடையோனே, காய்ந்தவன் - நம்பாற்
சினங்கொண்டவனாகிய அச்சுவகண்டன், விடுக்க - ஏவி விட்டதனாலே, ஈண்டு -
இப்போர்க்களத்தே, மன்னுயிருண்ணும் - நிலைபெற்ற உயிர்களை வாயிலிட்டு உண்ணுகின்ற,
சண்ட வேகை ஆம் - சண்டவேகை என்னும் தெய்வம் ஆகும், வருவதென்றான் -
இச்செயலைச் செய்துவருவது என்று அருக்ககீர்த்தி உரைத்தான், (எ - று.)

     தன் படை புறங்கொடுத்து ஒடுதலைக்கண்ட திவிட்டன் அருக்க கீர்த்தியை நோக்கி
இந்நிகழ்ச்சிக்குக் காரணம் என்னை என வினவ அருக்ககீர்த்தி அச்சுவகண்டன் விடுத்த
சண்டவேகை இவ்வாறு செய்து வருவதாயிற்று என்றான் என்க.

(304)

 

திவிட்டன் அருக்ககீர்த்தியை நகுதல்

1435.

3செற்றலன் விடுத்த பின்றைச்
     செகுத்துயிர் பருகினல்லான்
மற்றிது மறித லில்லை
     மறிப்பவர் பிறரு மில்லை
இற்றித னிலைமை யென்ன
     விருங்கடல் வண்ண னக்காங்
கற்றமி லலங்கல் வேலோ
     யஞ்சினை போறி யென்றான்.
 

     (இ - ள்.) மற்றிது - இச்சண்டவேகை என்னும் தெய்வம், செற்றலன் விடுத்த பின்றை
- நம் பகைவனாகிய அச்சுவகண்டன் ஏவிவிட்ட பின்னர், செகுத்து உயிர் பருகின்
அல்லால் மறிதலில்லை - பகைவர்களைக் கொன்று அவர் உயிர்குடித்து மீள்வதன்றி வாளா
மீள்வதின்றாம், பிறரும் - வேறு யாரும், மறிப்பவர் இல்லை - அதனைத் தடுக்கும்
ஆற்றலுடையோரும்


     (பாடம்) 1விடுக்கப்பட்டு. 2யிவ். 3செற்றவன