பக்கம் : 894 | | இவ்வுலகில் இலர், இதன் நிலைமை இற்று - இத்தெய்வத்தின் இயல்பு இத்தன்மைத்து, என்ன - என்று அருக்ககீர்த்தி இயம்ப, இருங்கடல் வண்ணன் நக்கு - திவிட்டன் சிரித்து, ஆங்கு - அவ்வண்ணம், அற்றம் இல் அலங்கல் வேலோய் - சோர்வு இல்லாத வெற்றி மாலையை உடைய வேற்படையோனே, அஞ்சினை போல்தி என்றான் - நீ மிக அஞ்சிவிட்டாய் போலும் என்று இயம்பினான், (எ - று.) மேலும், அருக்ககீர்த்தி, “இச் சண்டவேகை அச்சுவகண்டன் கருதியபடி உயிர்களைப் பருகி ஒழிவதன்றி, வாளா மீளாது ; அதைத் தடுக்கும் ஆற்றலுடையோரும் இலர், என்றானாக, நம்பி அவனை நகைத்து நீ பெரிதும் அஞ்சினை போலும் என்றான் என்க. | (305) | | திவிட்டன் பேருருக் கோடல் | 1436. | பேயெரி யுமிழ்ந்து நம்மேல் வருமெனப் பேசு கின்றாய் நீபெரி தினியை யென்னா நெடியவ 1னதனை நோக்கிக் காயெரி சுடர்விட் டாங்குக் கனன்றனன் கனல லோடு மாயிரு விசும்பு மஞ்சும் வடிவினன் வள்ள லானான். | இ - ள்.) பேய் எரி உமிழ்ந்து நம்மேல் வரும் எனப் பேசுகின்றாய் - ஓர் எளிய பேய் தீக்கான்று நம் மேலே போர் செய்யவரும் என்று கூறாநின்றாய், நீ பெரிது இனியை - நீ பெரிதும் இனிய மொழியை உடையாய், என்னா - என்று கூறி, நெடியவன் - திவிட்டன், அதனை நோக்கி - அச்சண்ட வேகையின் மாயச் செயலைப்பார்த்து, காய் எரி சுடர் விட்டாங்கு - சுடுகின்ற ஊழித் தீ சுடர்களைக் கக்கினாற்போன்று, கனன்றனன் - சினந்தான், கனலலோடும் - அவ்வாறு சினங்கொண்டவுடனே, வள்ளல் - திவிட்டன், மா இரு விசும்பும் அஞ்சும் வடிவினன் ஆனான் - மிகப் பெரிய விசும்பும் இவன் உருவத்திற்கு யாம் இடமுடையேம் அல்லம் என அஞ்சுதற்குக் காரணமான பேருருவத்தை எய்தினவன் ஆயினன், (எ - று.) எளியபேய் தீக்கான்று நம்மேல் போர் செய்யவரும் என்றனை உன் மொழி இனிதாயிருந்தது என்று கூறித் திவிட்டன் அப் பேயினைப் பார்த்து வெகுண்டானாக; வெகுளுதலோடே விசும்பும் அஞ்சும் பேருருவம் எய்தி நின்றான் என்க. | (306) | | திவிட்டன்பால் வலம்புரியும் வில்லும் வந்தெய்துதல் | 1437. | நலம்புரி செய்கை மேனாட் பெற்றநற் றோழ னேபோல் உலம்புரி யுருவத் தோளாற் குற்றபோழ் துதவ லுற்று | |
| (பாடம்) 1 ன்றன்னை. | | |
|
|