பக்கம் : 896 | | - முழுத்திங்கள் ஒரு புறத்தே அமையப் பெற்றதாய், வானவில் மருங்குகோலி - மற்றொரு பக்கத்தே இந்திரவில்லை வளைத்துக் கொண்டு, போந்து எழுகின்றது ஒத்தான் - வந்து தோன்றுவதனை ஒத்திருந்தான், (எ-று.) ஒருபுறத்தே வெளிய வலம்புரியினையும், மற்றோரு பக்கத்தே நெடிய வில்லையும் கொண்டு நின்ற நீலநிறமுடைய நம்பி, ஒருபுறத்தே திங்கள் பொருந்த, ஒருபுறத்தே வில்லிட்டுத் திகழாநின்ற பருவமேகம் ஒன்று புதிதாக வந்து தோன்றினாற் போன்று திகழ்ந்தான் என்க. வலம்புரி - பாஞ்சசன்னியம். சிலை - சார்ங்கம். | (309) | | திவிட்டன் உங்கரித்தலும், சண்டவேகை தன்னுருக்கோடலும் | 1439. | வலம்புரி சிலம்ப வாய்வைத் திருஞ்சிலை வளைய வேற்றிக் கலம்புரி கனபொன் னாழி கைவிரல் கதிர்ப்பச் சூட்டி உலம்புரி வயிரத் தோளா னுரப்பினா னுரப்ப லோடும் சலம்புரி தெய்வ மஞ்சித் தன்னுரு வடைந்த தன்றே. | இ - ள்.) வலம்புரி சிலம்ப வாய்வைத்து - அவ்வலம் புரிச்சங்கம் முழங்கும்படி தனது திருவாயிலே வைத்து, இருஞ்சிலை வளைய ஏற்றி - பெரிய வில்லை நன்கு வளையும்படி நாண் ஏற்றி, கலம்புரி கனபொன் ஆழி - அணிகலன் செய்யும் கனவிய பொன்னாலாகிய உருட்படையை, கைவிரல் கதிர்ப்பச் சூட்டி - தன் விரல்கள் ஒளி படைக்கும்படி அணிந்து, உலம்புரி வயிரத் தோளான் - திரள்கற் போன்ற திண்ணிய தோளையுடைய திவிட்டநம்பி, உரப்பினான் - உங்கரித்தான், உரப்பலோடும் - உங்கரித்தவுடனே, சலம்புரி தெய்வம் - வஞ்சப்போர் செய்யும் அச் சண்ட வேகை என்னும் தெய்வம், அஞ்சி - அச்சமுற்று, தன் உரு அடைந்தது அன்றே - தன்னுடைய உண்மை உருவத்தை எய்திற்று, அன்று, ஏ : அசைகள், (எ - று.) அவ்வாறு திகழ்ந்த நம்பி வலம்புரியை முழக்கி வில்லை நாணேற்றி ஆழிப்படையை விரல்களிலே செறித்து நின்று, உங்காரஞ் செய்த துணையானே அப்பேய் அஞ்சித் தனது உண்மை உருவினை எய்திற்றென்க. | (309) | | சண்டவேகை அஞ்சி மறைதல் | 1440. | நிலத்திடை நின்று வான முடியுற நிமிர்ந்து கண்ணின் புலத்தின தளவு நீங்கிப் பொம்மென வுயிர்த்து விம்மிப் பிலத்தின தளவிற் பேழ்வாய் பிறழ்ந்திலங் கெயிற்ற தாகிச் சலத்தினைப் புரிந்த தெய்வந் தலைபனித் துடைந்த தன்றே. |
| | |
|
|