சண்டவேகை இவ்வாறு அஞ்சித் தன் கூளிப் படையோடே வானத்தில் ஏறி மறைந்தவுடனே அச்சுவகண்டன் கைபுடைத்துக் கண்கள் சிவந்து வாயை மென்று என் யானையைக் கொண்டு வருக என்றான் என்க, |
(311) |
|
அச்சுவகண்டனை அஞ்சித் திவிட்டன் படை உடைதல் |
1442. | மாலுமால் களிறு நுந்தி மற்றவன் வருத லோடும் ஆலுமால் புரவித் திண்டே ரரசன தரவத் தானை 1வேலினா னுடங்கு நில்லா துடைந்திட வெகுண்டு நோக்கி நீலமா மணிக்குன் றொப்பா னெடுஞ்சிலை யிடங்கைக் கொண்டான். |
(இ - ள்.) மாலும் மால் களிறு நுந்தி - மதத்தான் மயங்கும் பெரிய களிற்றியானையைக் கடாவி, மற்றவன் வருதலோடும் - அவ்வச்சுவகண்டன் தன்மேல் போர்தொடுக்க வந்தவுடனே, ஆலும் மால் புரவித் திண்தேர் அரசனது அரவத்தானை - கனைக்கின்ற பெரிய குதிரைகள் பூட்டிய திண்ணிய தேரையுடைய திவிட்டனது முழக்கமிக்க படை, வேலினான் உடங்கு நில்லாது - வேலேந்திய திவிட்டனுடனே கூடி நில்லாது, உரைந்திட - அஞ்சி ஓடிட, நீலமா மணிக்குன்று ஒப்பான் - பெரிய மரகதமலையினை ஒப்பவனாகிய திவிட்டமன்னன், வெகுண்டு நோக்கி - சினந்து பார்த்து, இடங்கை - தன் இடக்கையில், நெடுஞ்சிலை கொண்டான் - தனது நீண்ட வில்லினைப்பற்றினான், (எ - று.) அச்சுவகண்டன், உலக நடுங்க நோக்கிக் களிற்றை ஏறிப் போர்க் களத்தே புக்கவுடன், திவிட்டன் சேனை அஞ்சிப் புறமிட்டோடிற்று; உடனே நம்பி வில்லை இடக்கையிலே கொண்டான் என்க. |
(312) |
|
திவிட்டன்பால் கருடன் வந்து எய்துதல் |
1443. | வாய்ந்தநல் வயிரத் துண்டம் வளைந்தொளிதுளும்ப வள்ளாற் சேந்தன சிறுக ணோடு திசைமுகஞ் சிறகு தம்மால் வேய்ந்தென விரித்து வீசி விசும்பிடை யிழிந்து வந்து காய்ந்தெரி கணையி னாற்குக் கருடனு முழைய னானான். |
|
பாடம்) 1 வேலினா னுடங்கி, வேலினால் விளங்கி. |