நிமித்திகன் கூறியதை அவையோர் உடன்பட்டுக் கூறுதல் |
109. | 1என்றவ னியம்பக் கேட்டே யிருந்தவர் வியந்து நோக்கிச் சென்றுயர் 2திலகக் கண்ணித் திவிட்டனித் திறத்த னேயாம் ஒன்றிய வுலக மெல்லா மொருகுடை நீழற் காக்கும் பொன்றிக ழலங்கன் மார்ப போற்றிபொய் யன்றி தென்றார். |
(இ - ள்.) என்று அவன் இயம்பக் கேட்டு - மேற்கூறியவாறு அந்த நிமித்திகன் சொல்லக் கேட்டு; இருந்தவர் வியந்து நோக்கி - அவையிலுள்ளோர் வியப்படைந்து அரசனைப் பார்த்து; ஒன்றிய உலகம் எல்லாம் - பொருந்திய வுலகங்கள் எல்லாவற்றையும்; ஒரு குடை நீழல் காக்கும் - ஒற்றைவெண் கொற்றக்குடையின் நிழலிலே பாதுகாக்கின்ற; பொன்திகழ் அலங்கல் மார்ப - பொன்னாலாகி விளங்குகின்ற மாலைகளை யணிந்த மார்பையுடையவனே!; சென்று உயர்திலகம் கண்ணி திவிட்டன் - மேலே சென்று சிறந்த திலகம்போல் உயர்ந்த மாலையை அணிந்த திவிட்டன்; இத்திறத்தனே ஆம் - இவ்வாறு சிறப்புப் பெறுதற்கு உரியவனேயாவன்; இது பொய் அன்று - நிமித்திகன் கூறியது மெய்யே; போற்றி என்றார் - நிமித்திகன் மொழிகளை மதிப்பாயாக என்றார்கள். (எ-று.) இருந்தவர் - வேள்வியாசிரியர் அமைச்சர் முதலியோர். இவர்கள் குறிகாரன் உரையை மதித்துப்பேசியது திவிட்டனுடைய நடையுடை பாவனை முதலியவைகளை நன்கு உணர்த்திருந்தமையினாலே என்க. திறத்தனே - ஏ - தேற்றப்பொருளது. போற்றுதல் - குறிக்கொள்ளுதல். |
( 40 ) |
அரசன் ஆராய்ச்சி மன்றத்தை அடைதல் |
110. | உரையமைந் திருப்ப விப்பா 3லோதுநா ழிகையொன் றோட 4முரசமொன் றதிர்த்த தோங்கி யதிர்தலு முகத்தி னாலே அரசவை விடுத்த வேந்த னகத்தநூ லவரை நோக்கி வரையுயர் மாடக் கோயின் மந்திர சாலை சேர்ந்தான். |
|
(பாடம்) 1. என்றவனுரைப்பக் கேட்டே. 2. திலதக்கண்ணி. 3. ஓடுநாழிகைக டோறும். 4. முரசமொன்றதிர்ந்த. |