பக்கம் : 900
 

அச்சுவகண்டனின் தற்புகழ்

1445. தானவர் நின்னைப் போலத் தந்திற லறிவி லாதார்
ஈனவ ரிரங்கி வீழ்ந்தா ரேனையர் தொழுது வாழ்ந்தார்
வானவ ரென்னை யஞ்சி வானிடை மறைந்து செல்வார்
ஊனவர் தம்மு ணீயே யுயிரெனக் கிழக்க லுற்றாய்.
 
     (இ - ள்.) தானவர் - அசுரர்கள், நின்னைப்போல - அடே திவிட்டனே
உன்னைப்போலவே, தந்திறல் அறிவிலாதார் - தம்முடைய வலிமையின் பெருமை
சிறுமைகளைத் தாமே தேர்ந்து தெளியாதவராகிய, ஈனவர் - எளியவராய், இரங்கி
வீழ்ந்தார் - எம்மை எதிர்ந்து பின் நம்பேதைமை எற்றென்று தாமே இரங்கி
மாண்டொழிந்தார், ஏனையர் - தம்மையும் எம்மையும், வலியுடைமையில் வைத்து அறிந்த
மற்றையோர், தொழுது வாழ்ந்தார் - எம்மை வணங்கி எம்மால் சிறந்த வாழ்க்கையை
எய்தினர், வானவர் - தேவர்களோ எனின், என்னை அஞ்சி - எமக்குப் பயந்து, வானிடை
மறைந்து செல்வார் - விசும்பிலே மறைந்து திரியா நின்றனர், ஊனவர் தம்முள் - ஊனுடல்
கொண்டுவாழும் எளிய மானிடருள்ளும், நீயே - எம்மை அறியாத பேதையாகிய நீயே,
எனக்கு உயிர் இழக்கல் உற்றாய் - எம்பால் உன் உயிரினை இழந்து விடுமாறு
வந்தெய்தினை, (எ - று.)

     தானவர் - விச்சாதரர் எனினுமாம், தானவர் தம்நிலை தேறாது எம்பால் வந்து
இரங்கி வீழ்ந்தார், எம்மை அறிந்தோர் தொழுது நல் வாழ்வெய்தினர், வானவர் எமக்கஞ்சி
மறைந்தே திரிவர், பேதாய்! நீயே எம்மை அறியாது வந்து வாளா உயிரிழக்கலானாய்;
என்றான் என்க.

(315)

 

அச்சுவகண்டன் திவிட்டனை அசதியாடல்

1446. மண்ணுள்வாழ் சிதலை 1சேர்தி மற்றவை வாழு நாள்கள்
எண்ணியாங் கிகந்த பின்னை யிறகுபெய்2தெழும தேபோல்
கண்ணினா 3லின்று நீயுங் கருடப்புள் ளதனை யேறி
விண்ணினா றெதிர்ந்து வந்தாய் வேற்கிரை யாகி யென்றான்.
 
     (இ - ள்.) மண்ணுள்வாழ் சிதலை சேர்தி - திவிட்ட நீ ஓராற்றால் புற்றினூடே
வாழ்கின்ற சிதலையினத்தைச் சேர்ந்தவனாகின்றாய், மற்றவை - (எற்றாலெனின்)
அச்சிதலைகள், வாழும் நாள்கள் - தாம் வாழ்கின்ற நாள் எல்லாம், எண்ணி ஆங்கு
இகந்து - கருதி அப்புற்றினுள்ளே கழித்து, பின்னை - வாழும் நாள் முடிந்து இறக்கும் நாள்
எய்திய பின்னர், இறகு
 

     (பாடம்) 1ச்சாதி. 2தெழுங்கள் போலாம். 3லதனை.