பக்கம் : 907 | | | வெயிலிடை விரிந்து விண்பால் விளங்கி வீ1ழிருளை நீக்கப் பயிலுடை யுலகந் தேறிப் பட்டது முணர்ந்த தன்றே. | (இ - ள்.) அயில் உடை அனல் செய்வேலோன் - கூரியதாய்த் தீக்காலும் சினவேலையுடைய திவிட்டன், அதனையும் அறிந்து - அத்துயிலம்பு வருகையையும் அறிந்துகொண்டு, துயில் விடை செய்யும் அம்பு தொடுத்தனன் - துயில் அகற்றும் இயல்பிற்றாய துயில்விடை அம்பொன்றை அதற்கெதிரே தொடுத்துவிட்டான், தொடுத்தலோடும் - அத்துயில் விடையம்பைத் தொடுத்தவுடனே, வெயில் இடைவிரிந்து விண்பால் விளங்கி வீழ் இருளைநீக்க - வெயில் ஒளி இடையே விரியப் பெற்று விண்பகுதியெல்லாம் விளக்க முறும்படி உண்டாகிய பேரிருளை அகற்றியதாக, பயில் உடை உலகம் தேறி - உறக்கத்தே பயின்ற உலகம் முழுதும் அவ்வுறக்கம் தெளியப்பெற்று, பட்டதும் உணர்ந்தது - இடையே நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் உணர்ந்து கொண்டது, அன்று, எ : அசைகள், (எ - று.) துயில் விடை அம்பு - உறக்கம் விடுவித் தெழுப்பும் அம்பு. உலகம் உறங்குமாறு செய்யும் துயிலம்பின் வருகையை உணர்ந்த நம்பி, அதற்கு மாறாகத் துயில்விடை அம்பு தொடுத்தான், அஃது உறக்கத்தே வீழ்ந்த உயிர்களின் துயிலெடுப்பி, உலகை மூடிய இருளையும் அகற்ற எல்லாரும் உணர்வு பெற்றனர் என்க. | (326) | | lஅச்சுவகண்டன் ஆழிப்படையை எடுத்தல் | 1457. | 2சீற்றமொ டிரியுஞ் செல்வத் தெய்வவம் பெய்த வெல்லா மாற்றினன் மறுப்ப நோக்கி மற்றவன் 3மாற்ற லான்பேர் ஆற்றலை யறிந்து வெய்ய வாழிகை யேந்தி யின்னும் ஏற்றனை பொருதி யோவென் றிலங்கெயி றிலங்க நக்கான். | (இ - ள்.) சீற்றமொடு இரியும் செல்வத் தெய்வ அம்பு எய்த எல்லாம் - சினத்தோடே ஓடாநின்ற தனக்குச் செல்வமாயமைந்த தெய்வக்கணைகள் தன்னால் எய்யப்பட்டவற்றை எல்லாம், மாற்றினன் மறுப்ப நோக்கி - திவிட்டன் தன் கணைகளை எய்து மாற்றித் தடைசெய்தமையைக் கண்டு, மற்றவன் - அவ்வச்சுவகண்டன், மாற்றலான் பேர் ஆற்றலை அறிந்து - தன் பகைவனாகிய திவிட்டனுடைய பெரிய ஆற்றலுடைமையைத் தன்னுள்ளே அறிந்தவனாய், வெய்ய ஆழிகையேந்தி, இப்படையான் அன்றி இவன் ஒழியான் எனக் கருதித் தனது கொடிய சக்கரப்படையைக் கையிலே | |
| (பாடம்) 1 ழிருளி னீங்கிப். 2சீற்ற மோ டீயுஞ். 3என்னை, செய்தான். | | |
|
|