பக்கம் : 913
 

     (இ - ள்.) நெருநல் - நேற்று, நெடுங்குடைக்கீழ் - நீண்ட திங்கட்குடையின் கீழே
அமர்ந்து, நேமிமுன் செல்ல - தன் ஆழிப்படை தன்னைக் காத்துத் தன் முன்பே செல்லா
நிற்ப, பொருநல்வய வேந்தர் - போர்செய்யும் நல்ல ஆற்றலுடைய அரசர்கள்,
போற்றிசைப்ப வந்தான் - வாழ்ந்தெடுக்குமாறு வந்தனன், செருநன்மற நேமி - போரிடத்தே
நல்ல ஆற்றலுடைய ஆழிப்படை, சென்றது - நெருநல் தனக்குத்துணையாய்த் தன்முன்
சென்ற அதுவே, போழ - தன் மார்பத்தைப்பிளக்க, எரிபொன் மணிமுடியான் -
விளங்குகின்ற பொன்னாலும் மணியாலும் இயன்ற முடியை உடைய அச்சுவகண்டன், இன்று
- இற்றை நாள், இவனோ சாய்ந்தான் - இத்தகைய பெருமையுடையோனும்
இறந்தொழிந்தான்,
(எ - று.)

     யாக்கை செல்வங்களின் நிலையாமை இருந்தவாற்றை உணருங்கோள் என்பது
குறிப்பெச்சம்.

     “நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
     பெருமை உடைத்திவ் வுலகு“ (திருக். - 336)

     என்னும் பொய்யாமொழியை ஈண்டு நினைவு கூர்க.

(335)

 
1466. தானெறிந்த நேமி தனக்கே 1பகையாகித்
தேனெறிந்த தாரான் சிறுவரைக்கண் 2வீடினான்
யானறிந்த வாற்றா லெளிய வுலகத்தில்
வானறிந்த 3வாழ்க்கையு மாயமே போலுமால்.
 
     (இ - ள்.) தான் எறிந்த நேமி - தன் பகைவனைக் கொல்லும் பொருட்டுத் தான்
ஏவிய தன்னுடைய ஆழிப்படை, தனக்கே பகையாகி - தன்னையே கொல்லும் பகையாக
மாறிவிட, தேன் எறிந்த தாரான் - தேன் துளிக்கும் மலர்மாலையை அணிந்த
அச்சுவகண்டன், சிறுவரைக்கண் - சிறியதொரு கால எல்லையினகத்தே, வீடினான் -
மாண்டொழிந்தான், யான் அறிந்தவாற்றால் - என்னுடைய சிற்றறிவானே யான் அறிந்து
கொள்ளுந்துணை, எளிய இவ்வுலகத்தில் - ஏழ்மையுடைய இம்மண்ணுலகத்தே, வான்
அறிந்த வாழ்க்கையும் மாயமே - தேவர்கள் அறியச் சிறப்புற்றமர்ந்த வாழ்க்கையும்
பொய்யே ஆயிற்று, போலும் : ஒப்பில் போலி, (எ - று.)

     மாயவித்தையைப் போன்ற தெனினும் ஆம்.

     “மணி மாடம் மாளிகை மேடை சதுரங்க சேனையுடனே
     வந்ததோர் வாழ்வு மோர் இந்திரசாலக் கோலம்“
     என்பர் தாயுமானார்.

(336)

 

(பாடம்) 1 பகையாக. 2 வீட்டினான். 3 வாட்கையு.