“சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே ஆகும்“ இஃது ஊழின் இயற்கை; ஊழினது செயலை மானிடர் அறிந்துகொள்ளும் வன்மை யுடையோரல்லர் என்று இரங்கிய படியாம். |
(338) |
|
அச்சுவகண்டன் மனைவியர் போர்க்களம் புகுதல் |
1469. | இன்னன கண்டார் மொழிந்திரங்கு மாயிடை அன்ன மனையா ரயகண்டன் தேவிமார் பொன்னவிர் பூங்குழையார் பொங்கேந் திளமுலையார் மின்னவிர் நுண்ணிடையார் மேல்வந் தணுகினார். |
(இ - ள்.) இன்னன கண்டார் மொழிந்து இரங்கும் ஆயிடை - இன்னோரன்ன நிலையாமைகூறி, அச்சுவகண்டன் மாண்டமை கண்டவர்கள் இரங்கும்பொழுது, அயகண்டன் தேவிமார் - அச்சுவகண்டனுடைய மனைவிமார்கள், அன்னம் அனையார் - அன்னப்பறவையைப் போன்றவர்களும், பொன் அவிர் பூங்குழலார் - அழகால் விளங்குகின்ற மலரணிந்த கூந்தலுடையாரும், பொங்கு ஏந்து இளமுலையார் - பருத்துயர்ந்த இளையமுலையினையுடையாரும், மின் அவிர் நுண்ணிடையார் - கொடிமின் போன்று ஒளிரும் நுணுகிய இடையுடையாரும் ஆகிய மகளிர்கள், மேல் வந்து - விசும்பாறாக வந்து, அணுகினார் - அச்சுவகண்டன் வீழ்ந்த விடத்தை அடைந்தனர், (எ - று.) இவ்வாறு அச்சுவகண்டன் மாண்டமை குறித்துக் கண்டோர் கூறி இரங்காநிற்ப, அவன் தேவிமார் விசும்பாறாக வந்து போர்க்களத்தே புக்கனர் என்க. |
(339) |
|
அச்சுவகண்டன் முதன் மனைவியின் நிலை |
1470. | வண்டார் மணிமுடியான் மார்பு துணிகிடப்பக் கண்டாள் பெருந்தேவி கண்டேதன் கைசோர்ந்து வெண்டாரை வேனெடுங்க ணீர்மூழ்கி மேற்பிறழ விண்டா ளுயிர்பின்னும் வெற்றுடல மாயினாள். |
|