பக்கம் : 917
 
  கேங்கினா ரெத்துணையோர் போழ்துங் கழிந்தெழுந்து
நீங்காத வாருயிரார் நீரா யுருகினார்.
 
     (இ - ள்.) வாங்கு கொடிமுறுக்கி - வளைந்த பூங்கொடிகளை முறுக்கி, மாநிலத்து
விட்டனபோல் - பெரிய பூமியிலே போடப்பட்டவற்றை ஒத்து, தாங்கார் - துயரம்
பொறாதவராய், தலைதடுமாறாய்க் கிடந்து - ஒருவர்க்கொருவர் தலை தடுமாற்றமாகக்
கிடந்து, அங்கு - அப்போர்க்களத்தே, ஏங்கினார் - ஏங்கி அழுது, எத்துணை போழ்தும் -
நீண்ட பொழுது, அங்கு அழிந்து - அவ்வாறு துன்பத்தால் அழிந்து பின்னர், எழுந்து
நின்று, நீங்காத ஆருயிரார் - ஊழ்வலியுண்மையால் அகன்றிடாது நிலைபெற்ற
உயிருடையராய், நீராய் உருகினார் - மன நீராய் விடும்படி, துயரத்தாலே உருகுவாராயினர்,
(எ - று.)

     பூங்கொடியினை அறுத்துப் பூமியிலே போகட்டாற் போன்று நீண்ட பொழுது
அத் தேவியர் ஏங்கிக் கிடந்து எழுந்து ஊழ்வலியாற் போகாத உயிரையுடையராய் நீரா
யுருகினார் என்க. எத்துணையோர் என்புழி ஓர், அசை.

 (342)

 

வேறு

1473. அரைசர் 1கோவே யடலாழி
     வலவ வார்க்குந் தோலாதாய்
புரிசை நகர நூற்றொருப
     துடையாய் பூமி முழுதாண்டாய்
உரைசெய் துலகம் பாராட்டு
     மொளியா யோடை 2யானைமேல்
வரைசெய் தனைய திரடோளாய்
     மறிதல் பொருளோ வயவேந்தே.
 
     (இ - ள்.) அரைசர் கோவே - வேந்தர்க்கும் வேந்தாயவனே, அடல் ஆழி வலவ -
வெற்றிமிக்க ஆழிப்படையில் வல்லுநனே, ஆர்க்குந் தோலாதாய் - எத்திறத்தாரிடத்தும்
தோற்றறியாதவனே, புரிசைநகரம் நூற்றொருபது உடையாய் - மதில் சூழ்ந்த பெரிய
நகரங்கள் நூற்றுப்பத்துடையோனே, பூமிமுழுது ஆண்டாய் - இவ்வுலகம் முழுதும் ஒரே
குடைக்கீழ் ஆண்டோனே, உரைசெய்து உலகம் பாராட்டும் ஒளியாய் -அறிஞர்கள் எடுத்து
மொழிந்து பாராட்டுகின்ற புகழை உடையோனே, ஓடை யானைமேல் வரைசெய்தனைய
திரள் தோளாய் - முகபடாமணிந்த அரசுவாவின்மேலே அமர்ந்து, செல்லும் மலையைத்
திரட்டிச் செய்தாலொத்த தோளையுடையோனே, மறிதல்பொருளோ - எம்மை நீத்து நீ
இவ்வாறு மாண்டு போதல் உனக்குத் தகுதியாமோ,
வயவேந்தே - வெற்றிமிக்க வேந்தனே, (எ - று.)
 

(பாடம்) கேறே. 2 யானையாய்.