பக்கம் : 918
 

கோவே ! ஆழிவலவ ! தோலாதாய் ! உடையாய் ! முழுதாண்டாய் ! ஒளியோய் ! தோளாய்
! எம்மைவிட்டு நீ இவ்வாறு மாண்டது பொருளாமோ என்றார் என்க

. (343)

 

1474. வானு மண்ணு முடனஞ்சும்
     1வரையாய் மன்னர் மணிமுடிமேல்
தேனும் வண்டும் பலசென்று
     திளைக்குஞ் செம்பொற் செறிகழலாய்
நான மண்ணி யகிறேக்கி
     நாவி கமழு மெழிலாகம்
ஈன மண்ணி லிவர்காணக்
     கிடத்த லினிதோ 2வியல்வேந்தே.
 
     (இ - ள்.) வானும் மண்ணும் உடன் அஞ்சும் - வானுலகத்தாரும் மண்ணுலகத்தாரும்
ஒருங்கே அஞ்சாநின்ற, வரையாய் - மலையுலகத்து மன்னனே, மன்னர் மணி முடிமேல்
தேனும் வண்டும் பல சென்று - பகை மன்னர்களின் மணிகளிழைத்த முடியின்மேல்
மொய்த்த வண்டுகளும் தேனும் ஆகிய பலவும் வந்து, திளைக்கும் - பொருந்துகின்ற,
செம்பொற் செறிகழலாய் - செவ்விய பொன்னாற் செய்துகட்டிய வீரக்கழலுடையோய்,
நானமண்ணி - நன்னீரினும் பன்னீரினும் குளித்து, அகில் தேக்கி - அகிற்புகை
யூட்டப்பெற்று, நாவிகமழும் கத்தூரி மணங்கமழாநின்ற, எழில் ஆகம் - அழகிய உன்
திருமேனி, ஈன மண்ணில் - புலால்நாறும் இப்போர்க்களத்தே, இவர் காண - எளிய
இம்மானிடர் காணுமாறு, கிடத்தல் இனிதோ - எளிதாய்க் கிடத்தலும் நன்றாமோ, இயல்
வேந்தே - இலக்கணமமைந்த வேந்தனே, (எ - று.)

     வரையாய் ! கழலாய் எழிலாகம் இவர்காண ஈனமண்ணிற் கிடத்தல் இனிதோ என்று
புலம்பினர் என்க.

 (344)

 
1475. குழவி நாயிற் றெழிலேய்க்குங்
     குழம்பார் கோலக் குங்குமமே
மெழுகி மீதோர் மணியாரம்
     வீசிக் கிடந்த விரையாகம்
ஒழுகு குதுதிச் சேறாடி
     யோடை யானை நுதன்மீது
வழுவி வீழ்ந்த வகைநாடின்
     மாயம் போலு மறவேந்தே.
 

(பாடம்) 1 வகையாய். 2 விகல் வேந்தே.