பக்கம் : 920 | | பொன்கட்டிலிற் பரப்பிய பூம்படுக்கை மிசையிருந்து அன்னம் போன்ற மகளிர்கள் அடிவருடப் பள்ளிகொள்ளற்குரிய நீ அதனை ஒழிந்து மதயானை நெற்றியின் மிசை முடிசாய்த்து ஒன்றும் உரையாதே துயிலுதல் உனக்குப் புகழாமோ என்றார் என்க. | (346) | | 1477. | மகரப் பைம்பூண் மடவார்கள் வயிரக் குழையும் பொற்றோடும் தகரக் குழலு 1மெழினுதலுந் திருத்திப் பயின்ற தாழ்தடக்கை சிகர மனைய மதயானைச் செவிமேற் சரிந்து செங்குருதி பகரக் கழுகு பாராட்டக் கிடத்த றகுமோ படைவேந்தே. | (இ - ள்.) மகரப் பைம்பூண்மடவார்கள் - மகரமீன் வடிவினவாய்ச் செய்த அணிகலனுடைய மகளிர்களின், வயிரக்குழையும் - வயிரமணி அழுத்திய தோடும், பொற்றோடும் - பொன்னாலியன்ற தோடும், தகரக்குழலும் - மயிர்ச்சந்தன மணமூட்டப்பெற்ற கூந்தலும், எழில் நுதலும் - அழகிய நெற்றியும், ஆகிய இவையிற்றை, திருத்திப் பயின்ற - சீர்திருத்திப் பழகிய, தாழ்தடக்கை - முழந்தாளளவும் நீண்டு தொங்குகின்ற வலிய கைகள், சிகரமனைய மதயானை செவிமேல் - மலைச்சிகரத்தை ஒத்த நினது மதயானையினுடைய செவியின்மேல், சரிந்து - சாய்ந்து, செங்குருதி பகர - சிவந்த குருதி பாயா நிற்ப, கழுகு பாராட்ட - கழுகுகள் புகழ்ந்து வாழ்த்த, கிடத்தல் தகுமோ - இங்ஙனம் கிடப்பது தகுதியாமோ கூறாய், படைவேந்தே - படைமிக்க வேந்தனே, (எ - று.) பகர்தல் - விளைதல் - குருதிவிளைதலாவது பாய்தல். மகளிர்களின் குழையும் தோடும் குழலும் நுதலும் திருத்திப் பயின்ற உன் தடக்கை மதயானையின் செவிமேலே சரிந்து கிடப்ப, கழுகுகள் பாராட்ட நீ இவ்வாறு கிடத்தல் உன் பெருமைக்குத் தகுதியோ என்றார் என்க. | (347) | | 1478. | வெய்ய சுடரோன் றண்கதிரோ னெனவீங் கிவர்கண் மதிலியங்கார் பைய வந்து தாமரையின் பரவைத் தடத்து மாளிகைமேல் |
| (பாடம்) 1 மளகமும். | | |
|
|