பக்கம் : 923 | | உன் பெருந்தேவி மாழ்கி இவ்விடத்தே உயிர் நீப்பவும், உன் வெற்றிமுரசம் பிறர் வெற்றிகூறி முழங்கவும், உன் நகரச் செல்வம் சிதையவும், நீ இவையிற்றைக் கண்டும்,சினவாதிருக்கின்றனை; இடியேற்றை ஒப்பானவனே ! நீ இவ்வுலகினைத் துறவியர் போன்று உவர்த்து ஒழித்தனையோ ! என்று இரங்கினர் என்க. | (350) | | 1481. | மூரி முந்நீ ருலகங்கண் முழுதுங் காவன் முனிந்தாயோ ஆரு மில்லா வடியோகங்கள் வழிபா டாற்ற மாட்டாயோ சீரின் மன்னும் வளநாடுந் தெய்வப் படையுஞ் செல்வமுநீ பாரின் மன்னர் பிறர்கொள்ளப் பணித்த தென்னோ படைவேந்தே. | (இ - ள்.) மூரி முந்நீர் உலகங்கள் - பெரிய கடல்சூழ்ந்த இவ்வுலகங்கள், முழுதும் காவல் முனிந்தாயோ - முற்றும் ஓம்பா நின்ற நின் காவற்றொழிலை வெறுத்தொழித்தனையோ, ஆரும் இல்லா அடியோங்கள் - உன்னைத் தவிரப் புகலாவார் யாரையும் பெற்றிராத உன் மெய்யடியேமாகிய எளியேங்கள், வழிபாடு ஆற்ற - உனக்கு வழிபாடு செய்தலை, மாட்டாயோ - ஏற்றுக்கொள்ள மாட்டாயோ, சீரின் மன்னும் வளநாடும் - சிறப்போடே நிலைபெற்ற உனது வளமிக்க நாட்டையும், தெய்வப் படையும் - கடவுட்டன்மையுடைய ஆழிப்படையையும், செல்வமும் - பிற செல்வங்களையும், பாரின் மன்னர் பிறர் பூமியாளும் சிறு மன்னராகிய நின் ஏதிலார், கொள்ள - கொள்ளை கொள்ளும்படி, நீ பணித்தது - நீ அவர்களுக்குக் கட்டளையிட்ட செயல், என்னோ - யாது கருதியோ, படைவேந்தே - படைமிக்க அரசனே, கூறுக, (எ - று.) நீ உலகங் காத்தற் றொழிலை வெறுத்தனையோ ! உன் அடியேங்கள் வழிபாட்டை ஏன்று கொள்ளாயோ ! சிறந்த உன் வளநாட்டையும், தெய்வப் படையையும், செல்வத்தையும் உன் பகைவர் கொள்ளை கொள்ள விட்டுவிட்டதன் காரணம் யாதோ? கூறாய் என்றார் என்க. | (351) | |
| | |
|
|