பக்கம் : 925 | | (இ - ள்.) மஞ்சு தோயும் வரையார் தம் மன்னன்றன்னை - முகில்கள் படியாநின்ற மலையிடத்தே வாழும் விஞ்சையருடைய வேந்தனாகிய அச்சுவகண்டன் உடலை, அஞ்சுதோன்ற - தம் அச்சம் தோன்றுமாறு, மதயானை நுதலின் இழித்து - யானையினது நெற்றியினின்றும் அகற்றி, அந்தணாளர் - பார்ப்பனர்கள், மெய்தீண்டி - அவ்வுடலைத் தம் கையாலே பற்றி, பஞ்சும் - மெல்லிய பஞ்சினையும், துகிலும் - வெண்டுகிலையும், பூம்பட்டும் - அழகிய பட்டினையும், பாய - பரப்பியுள்ள, பள்ளிபடுத்து - படுக்கையை விரித்து, அதன்மேல் - அப்படுக்கையின்மேல், வஞ்சமில்லாப் புகழானை - மெய்யாய புகழுடைய அச்சுவகண்டனை, வயங்கு செந்தீவாய் - ஒளிர்கின்ற செவ்விய தீயிடத்தே, பெய்தார் - இட்டனர், (எ - று.) அந்தணாளர் அச்சுவகண்டன் உடலைத் தீண்டிப் பஞ்சும் துகிலும் பட்டும் பரப்பிய பள்ளியின் மேலே கிடத்திச் செந்தீப் பெய்தார் என்க. அஞ்சு - அச்சம். அந்தணாளர் ஆகலின் அத்தீயோன் பிணத்தையும் அஞ்சினர் என்பார் ‘அஞ்சுதோன்ற இழித்தனர்’ என்றார். | (353) | | 1484. | மணிகண்டன் முதலிய ஏனையோர் உடலங்களையும் தீயிலிடல் மன்னன் றம்பி 1மார்களையு மக்க 2டமையு மற்றொழிந்த பொன்னம் புனைதார் வேந்தரையும் பொருது பட்ட 3போர்க்களமீ 4தென்னுஞ் சாடு மெரிவாய்ப்பெய் திரங்கி யழுதாங் கேகினரால் உன்னி வந்த முடிக்ககிலா துடைந்த வேந்த னுழையாரே. | (இ - ள்.) மன்னன் தம்பிமார்களையும் - அச்சுவகண்டன் தம்பிமாராகிய மணிகண்டன் முதலியோர் உடலங்களையும், மக்கள்தமையும் - கனகசித்திரன் முதலிய அவன் மக்கள் உடலங்களையும், மற்று - மேலும், ஒழிந்த - எஞ்சிய, பொன் அம்புனை தார் வேந்தரையும் - அழகிய பொன் மாலையையும் பூமாலையையும் அணிகின்ற இறந்த வேந்தர் உடலங்களையும், பொருதுபட்ட போர்க்களமீது - போர்செய்து மாண்டொழிந்த அப்போர்க் களத்திற்றானே, என்னும் சாடும் - எதனையும் கொன்று தீர்க்கின்ற, எரிவாய்ப் பெய்து - நெருப்பிடத்தே இட்டு, இரங்கி அழுது ஆங்கு ஏகினர் - அவர்க்குப் பெரிதும் இரங்கி அழுதவாறே மீண்டு போகலானார், உன்னிவந்த முடிக்ககிலாது - தான் எண்ணிவந்த செயல்களை முடிக்கமாட்டாது, உடைந்த - மாண்டொழிந்த, வேந்தன் - அச்சுவகண்டனுடைய, உழையர் - பக்கத்துள்ள வேந்தர், (எ - று.) | |
| (பாடம்) 1மார்களும். 2டாமு. 3போர்க்களந். 4தென்னஞ்சாடியெ. | | |
|
|