பக்கம் : 927
 
  சுரிவளர் குஞ்சிமேற் சொரிந்த பூமழை
வரிவளை முரசொடு மயங்கி யார்த்தவே.
 
     (இ - ள்.) எரிவளர் ஒளிதரு நேமி எய்திய - தீப்பிழம்பு எரிந்தாற்போலே ஒளி
பரப்புகின்ற ஆழிப்படையை அடைந்த, திருவளர் படர்ஒளி செங்கண் மாலவன் - செல்வம்
மிக்க பரவிய புகழையுடைய சிவந்த கண்களோடு கூடிய திருமாலாகிய திவிட்டனது,
சுரிவளர் குஞ்சிமேல் - சுரிந்து வளர்ந்த தலை மயிர்க் கற்றையின் மேலே, பூமழை
சொரிந்த - மலர்மாரி பெய்தன, வரிவளை முரசொடு மயங்கி ஆர்த்த - வரிகளையுடைய
சங்குகள் முரசுகளோடே கலந்து முழங்கின, (எ - று.)

     பூமழை தேவர் சொரிந்தார்; வளையும் முரசும் படைஞர் முழக்கினர் என்க.
திவிட்டநம்பியின் வெற்றி குறித்துத் தேவர்கள் மலர் மாரி பெய்தனர். யாண்டும்
வெற்றிச்சங்கும் வெற்றிமுரசும் முழங்கின என்க.

(356)

 

வான் தருமொழி (அசரீரி வாக்கு)

1487. அரிதினி னவனெய்த தெய்வ வம்புக
ளுரிதினி னறுத்தொளிர் நேமி கொண்டது
பெரிதிது சித்திர மென்று பேரொலி
விரிதரு விசும்பிடை விரவி 1நின்றதே
 
     (இ - ள்.) அரிதினின் அவன் எய்த தெய்வ அம்புகள் - விலக்கரியதோர் ஆற்றானே
அவ்வச்சுவகண்டன் விடுத்த கடவுட் டன்மையுடைய அம்புகளை, உரிதினின் - தனக்குரிய
அம்பினாலே, அறுத்து - அறும்படி மாற்றி, ஒளிர் நேமி கொண்டது இது - திகழுகின்ற
அவனது ஆழிப்படையைத் தனதாக்கிக் கொண்ட இச்செய்கை, பெரிது சித்திரம் - பெரிதும்
வியத்தற்குரியதாயிருந்தது, என்று - என்று கூறியதோர், பேரொலி - பெரிய முழக்கம்,
விரிதரு விசும்பிடை - அகன்ற வான்முழுதும்,
விரவி நின்றதே - பரவி நிற்பதாயிற்று, (எ - று.)

     அச்சுவகண்டன் விடுத்த தடுத்தற்கரிய தெய்வக் கணைகளைத் தடுத்து அவனது
ஆழிப்படையைத் தனதாக் கொண்டேவிய செயல் வியப்புடைத்தென்று வான்மொழி கூறிய
பேரொலி விசும்பு முழுதும் பரவிற் றென்க.

(357)

 
விச்சாதரர் திவிட்டனை வணங்குதல்
1488 வெஞ்சினஞ் செருக்கொடு வீய மானமும்
விஞ்சைய ரொழிந்தன ரொழிந்து வீரனை
 

     (பாடம்) 1 நின்றவே.