பக்கம் : 930 | | | பயாபதி வேந்தனின் மகிழ்ச்சி | 1492. | மக்கள தாற்றலான் மலர்ந்த கண்ணினன் மிக்குமேல் விரிந்தொளி துளும்பு மேனியன் தொக்கநீர்ச் சுரமைநா டுடைய கோனிவை பக்கநின் றரசர்கள் பணியச் சொல்லினான். | (இ - ள்.) மக்களது ஆற்றலான் - தன்மக்களுடைய பேராற்றலை உணர்ந்தமையாலே, மலர்ந்த கண்ணினன் - மகிழ்ச்சிமிக்கு மலர்ந்து விளங்கும் கண்களை உடையனாய், மிக்கு மேல் விரிந்து ஒளிதுளும்பும் மேனியன் - அகமகிழ்ச்சி மிகுந்து மெய்படப் பரவி ஒளிதவழா நின்ற திருமேனியை உடையனாய், தொக்க நீர்ச் சுரமை நாடுடைய கோன் - மிக்க நீர்வளமுடைய சுரமை நாட்டை ஆள்கின்ற அரசனாகிய பயாபதிவேந்தன், பக்கம்நின்று அரசர்கள் பணிய இவை சொல்லினான் - தன் பக்கத்தே நின்று வேந்தர் பலர் வணங்காநிற்ப இம் மொழிகளைக் கூறினான், (எ - று.) தன் மக்களின் வெற்றியை உணர்ந்த பயாபதி அளவில்லாத மகிழ்ச்சியுடையனாய், கண்மலர்ந்து உடல் பூரித்துப் பின் வருமாறு கூறினன் என்க. | (362) | | | பயாபதி மக்களின் முடிசூட்டுவிழவினைக் காண விழைதல் | 1493. | தீதறு மணிமுடிச் செல்வக் காளையர் தாதையென் 1றியலுரை தவத்தி னெய்தினேன் ஆதலா 2லிவர்தம தரச கோலமெங் காதலங் கண்ணிவை காண 3லாகுமே. | (இ - ள்.) தீதறு மணிமுடிச் செல்வக் காளையர் - குற்றமற்ற மணிகளானியன்ற கோமுடியினை உடைய செல்வமிக்க இவ் விசய திவிட்டர்களின், தாதை என்று - தந்தையாவான் பயாபதி என்னும், இயலுரை - நிகழாநின்ற புகழ்மொழியை, தவத்தின் - மேலைத்தவப்பயனானே, எய்தினேன் - பெற்றுள்ளேன். ஆதலால் - ஆகையாலே, இவர் தமது -இவருடைய, அரசகோலம் - திருமுடி சூட்டும் எழிலும், காதலங்கண் இவை - காண வேணவாவுடைய இந்தக் கண்கள், காணல் ஆகுமே - கண்டு மகிழ்தலும் இயல்வதேயாம், (எ - று.) இவர்க்குத் தாதையாக்கிய தவம், இதனையும் காட்டுமாகலின், காணலாகும் என்றான் என்க. | (363) |
| (பாடம்) 1 றிவ்வுரை. 2 லிவ னென வரசர். 3 லுற்றவே. | | |
|
|