பக்கம் : 933 | | திவிட்டனுக்குக் காப்புநாண் அணிதல் | 1498. | திருமகள் பரிவொடு சென்று 1சார்தரு முருவினு மொளியினு முலகந் தன்னின்மேன் மருவிய நூலது மரபி னானுமக் கருமுகில் வண்ணனைக் காவ னாட்டினார். | (இ - ள்.) திருமகள் பரிவொடு - திருமகள் விருப்பத்தோடே, சென்று சார்தரும் - தானே வந்து அடையும், உருவினும் - திருமேனி உண்மையானும், ஒளியினும் - பெரும்புகழுண்மையானும், உலகந்தன்னின் - இவ்வுலகத்தே, மேல் மருவிய நூலது மரபினானும் - பண்டு பொருந்திய மெய்ந்நூல்கள் கூறும் வரலாற்றானும், அக் கருமுகில் வண்ணனை - அந்தத் திருமாலே ஆகின்ற திவிட்டனை, காவல் நாட்டினார் - காப்புச் செய்தனர், (எ - று.) உருவினானும் ஒளியினானும் நூற்சான்றானும் வாசுதேவனே என்று அறியப்பட்ட திவிட்ட நம்பியைக் காப்பு நாண் அணிந்தனர் என்க. | (368) | | திவிட்டனை வாசுதேவன் எனப் பாராட்டி முடியணிதல் | 1499. | விட்டெரி மணிவரை நேமி வேந்தனை அட்டிவ னெய்தினா னாழி யாதலான் மட்டிவ ரலங்கலான் வாசு தேவனென் றொட்டிய வொளிமுடி யொன்று சூட்டினார். | (இ - ள்.) விட்டு - சுடர்வீசி, எரி - ஒளிர்கின்ற, மணிவரை - இரத்தின பல்லவம் என்னும் மலையை உடைய, நேமி வேந்தனை - சக்கரத்தையுடைய பிரதி வாசுதேவனாகிய அச்சுவகண்டனை, அட்டு - கொன்று, இவன் - இத்திவிட்டன், ஆழி எய்தினான் ஆதலான் - தனக்குரிய சக்கரப் படையை அவன்பாலிருந்து பெற்றானாதலாலே, மட்டு இவர் அலங்கலான் - தேன் துளும்புகின்ற மலர்மாலையையுடைய இவன், வாசுதேவனே - வாசுதேவனே ஆவான், என்று - என்று கூறி, ஒட்டிய ஒளி முடி - பொருந்திய ஒளியை உடைய முடிக்கலன், ஒன்று - ஒன்றனை, சூட்டினார் - திவிட்டநம்பியின் - தலையிலே சூட்டினார்கள், (எ - று.) |
| (பாடம்) 1 சார்ந்தன. | | |
|
|