பக்கம் : 934 | | பிரதி வாசுதேவனாகிய அச்சுவகண்டனைக் கொன்று அவன் ஆழியையும் கைப்பற்றினமையால் நம்பி வாசுதேவனே என்று புகழ்ந்து முடிக்கலன் அணிந்தனர் என்க. | (369) | | விசயனைப் பலதேவனே இவன் எனப் பாராட்டி முடியணிதல் | 1500. | பெருகிய மிகுதிறற் பெரிய நம்பியை மருவிய 1வளைவண னென்ன நீண்முடி கருவிய மரபினாற் கவித்துக் காவலன் திருவமர் சேவடி சிலம்ப வாழ்த்தினார். | (இ - ள்.) பெருகிய மிகுதிறல் - நாடோறும் பெருகி வளர்ந்த மிக்க ஆற்றலுடைய, பெரிய நம்பியை - மூத்த நம்பியாகிய விசயனை, மருவிய - அவ்வாசுதேவனை அகலாது கூடிய, வளைவணன் என்ன - பலதேவனே இவன் என்று புகழ்ந்து, நீண்முடி - நெடிய முடிக்கலன் ஒன்றனை, கருவிய மரபினால் - தொகுதிகளையுடைய முறைமையாலே, கவித்து - தலைமிசைச் சூட்டி, காவலன் - அப்பலதேவனுடைய, திருவமர் - திருமகள் விரும்புதலையுடைய, சேவடி - செய்ய அடிகளை, சிலம்ப - ஆரவாரம் மிகும்படி, வாழ்த்தினார் - புகழ்ந்து வாழ்த்துவாராயினர், (எ - று.) மூத்த நம்பியையும் வாசுதேவனை அகலாத பலதேவனே இவன் என்று புகழ்ந்து முடிக்கலன் அணிந்து ஆரவாரமுண்டாகும்படி வாழ்த்தினார் என்க. | (370) | | சக்கர முதலிய பிற அருங்கலங்களும் வந்தெய்துதல் | 1501. | இருங்கலி விழவினோ டரசி யற்றலும் பெருங்கலி விழவின தெய்வம் பேணுவ சுருங்கலில் சுடரொளி துளும்பத் தோன்றல்பா லருங்கல மொழிந்தவு மடைந்த வென்பவே. | (இ - ள்.) இருங்கலி விழவினோடு - பேராரவாரமுடைய திருவிழாக்களோடே, அரசியற்றலும் - திவிட்டநம்பி அரசாட்சி செலுத்தும்பொழுது, அருங்கலம் ஒழிந்தவும் - பெறற்கரிய நன்கலங்களாகிய முன்னரே தன்பால் எய்திய ஆழி வில் சங்கொழிந்த ஏனையவும், பெருங்கலி விழவின - மிக்க முழக்கமுடைய விழாக்கோடற்குரியனவும், தெய்வம் | |
| (பாடம்) 1 புகழ்பல தேவனீ. | | |
|
|