பக்கம் : 935 | | பேணுவ - தேவர்களால் போற்றப்படுவனவும் ஆகியவைகள், சுருங்கலில் - கெடாத, சுடர் ஒளி துளும்ப - சுடராலாய ஒளிதவழும்படி, தோன்றல்பால் - திவிட்டநம்பியினிடத்தே, அடைந்த என்பவே - தாமே வந்து எய்தின என்று அறிஞர்கள் கூறுப, (எ - று.) இவ்வாறு நம்பி அர சியற்றினனாக முன்னர் வந்தெய்திய அருங்கலம் போக எஞ்சியவைகளும் நம்பியை வந்தடைந்தன என்க. | (371) | | திவிட்டனின் அரசியல் மாண்பு | 1502. | சக்கரந் தண்டுவாள் சங்கு விற்குடை மிக்கெரி மணியிவை யெய்தி வீரியன் மக்களு ளரசர்கள் வணங்குந் தெய்வமாய்த் தொக்கெரி சுடரொளி துளும்பத் தோன்றினான். | (இ - ள்.) சக்கரம் தண்டு வாள் சங்கு வில் குடை ஆழியும் தடியும் வாளும் சங்கும் வில்லும் குடையும், மிக்குஎரி மணி - மிகுந்து விளங்குகின்ற திருமணியும், இவை - ஆகிய இவையிற்றை எய்தப்பெற்று, வீரியன் - வீரமிக்க திவிட்ட நம்பி, மக்களுள் - மானிடர் உள்ளும், அரசர்கள் - மன்னர் ஆயவர், வணங்கும் தெய்வமாய் - வழிபடுகின்ற தெய்வமே ஆகி, எரிதொக்கு சுடர்ஒளி துளும்ப - ஒளிகள் திரண்டு சுடர்ந்து ஒளிர்ந்து தவழ, தோன்றினான் - விளங்கித் தோன்றாநின்றான், (எ - று.) சக்கரம் முதலிய அருங்கலங்கள் கைவரப்பெற்ற நம்பி, மக்களுள்ளும் மன்னரால் வணங்கப்படும் தெய்வமாய்ப் புகழுடனே திகழா நின்றான் என்க. “முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப் படும்“ என்றார் வள்ளுவரும் என்க. | (372) | | சங்கநிதி பதுமநிதிகள் நிதி சொரிதல் | 1503. | சென்றுயர் வலம்புரி செம்பொற் றாமரை என்றியல் 1பெயரின விரண்டு மாநிதி ஒன்றல மணிகளு மொளிபொன் மாழையு நின்றிவை சொரிந்தொளி நிழற்று கின்றவே. | |
| (பாடம்) 1 பெரியன. | | |
|
|