பக்கம் : 936
 

     (இ - ள்.) சென்று உயர் - ஓங்கியுயர்ந்த, வலம்புரி - சங்கநிதி, செம்பொன் தாமரை -
செவ்விய பொன்னிறமுடைய பதுமநிதி, என்று இயல் பெயரின - என்று வழங்குகின்ற
பெயரினை உடைய, இரண்டும் - இரண்டாகிய இவ்வருங்கலங்கள், மாநிதி ஒன்று அல -
பெருஞ் செல்வம் ஒன்றுமட்டுமே அல்ல, மணிகளும் ஒளிபொன் மாழையும் -
மணிவகைகளும், ஒளியுடைய பொற்கட்டிகளும், இவை - இன்னோரன்னவைகளும்,
சொரிந்து - வேண்டுவன வழங்கி,
ஒளி நிழற்றுகின்றவே - சுடர்வீசித் திகழ்வனவாயின, (எ - று.)

     மாநிதி, ஒன்றலமணிகளும் - மாநிதியும் பலவாகிய மணிகளும் என்பதூஉமாம். பொன்
மாழை - பொற்கட்டி.

     மணிகள் - சிந்தாமணி சூளாமணி முதலிய மணிகளுமாம்.

     நம்பிக்குச் சங்கநிதி பதுமநிதிகளும் ஏவல் செய்வனவாய் வேண்டிய போது வேண்டிய
நிதியைச் சொரிந்தன என்க.

(373)
 

சங்கநிதி பதுமநிதிகள் கருவூலத்தை எய்துதல்

1504. மிக்கெரி சுடர்முடி சூடி வேந்தர்க
டொக்கவ ரடிதொழத் தோன்றுந் தோன்றலா
லக்கிரப் பெருஞ்சிறப் பெய்தி யாயிடைச்
சச்கரப் பெருஞ்செல்வச் சாலை சார்ந்தவே.
 
     (இ - ள்.) மிக்கு எரிசுடர் முடிசூடி - மிக்கொளிர்கின்ற சுடரையுடைய முடிக்கலன்
அணிந்தவனாய், வேந்தர்கள் தொக்கவர் அடிதொழ - அரசர்கள் தன்னைச்சூழ்ந்து
குழாங்கொண்டு தன் அடிகளை வணங்குமாறு, தோன்றும் - விளங்குகின்ற, தோன்றலால் -
திவிட்ட நம்பியாலே, அக்கிரப் பெருஞ்சிறப்பு எய்தி - அக்கிரபூசனை செய்யப் பெற்று,
ஆயிடை - அப்பொழுது,
 
     சக்கரப் பெருஞ் செல்வம் சாலை சார்ந்தவே - சக்கரவர்த்திகட்குரியவாய பெரிய
அம்மாநிதிகள் பயாபதியின் கருவூலத்தைச் சார்ந்தன, (எ - று.)

     அக்கிரப் பெருஞ்சிறப்பு - முதன்மையான வழிபாடு.
சக்கரப் பெருஞ்செல்வம் என்றது சங்கநிதி பதுமநிதிகளை.

     சங்கநிதி பதுமநிதிகள் நம்பியால் நன்கு வழிபாடு செய்யப்பெற்று அரண்மனைக்
கருவூலத்தை எய்தின என்க.

(374)

 

சங்கு முதலிய அருங்கலங்கட்குக் கோயிலெடுத்தலும்
அவற்றுள் வைத்து வழிபடலும்

1505. அருங்கலப் பெருந்தெய்வ மவையுந் தத்தமக்
கொருங்குசெய் வளநக ரடைந்த வொண்சிறை