பக்கம் : 937 | | | சுருங்கலில் கருடற்குச் சுடருந் தோன்றலாற் பெருங்கலி மாளிகை பேணப் பட்டதே. | (இ - ள்.) அருங்கலப் பெருந்தெய்வம் அவையும் - அருங் கலங்களாகிய சங்குசக்கர முதலியனவும், தத்தமக்கு ஒருங்கு செய் வளநகர் அடைந்த - தத்தமக்குத் தனித்தனியாக ஒரே இடத்தில் இயற்றப்பட்ட வளப்பமிக்க கோயில்களை எய்தின, ஒண்சிறை சுருங்கல்இல் கருடற்கு - ஒளிமிக்க சிறகுகளுடனே ஆற்றல்குறைதலில்லாத கருடனுக்கும், சுடரும் தோன்றலால் - திகழ்கின்ற திவிட்டநம்பியாலே, பெருங்கலி மாளிகை - பெரிய விழா ஆரவாரத்தினையுடைய கோயில், பேணப்பட்டதே - எடுத்துப் போற்றப்பட்டது, (எ - று.) கலி - விழாவார வாரம் என்க. சங்கம் முதலிய அருங்கலங்கட்கும் ஓரிடத்தே தனித்தனி கோயில் எடுக்கப்பட்டனவாகலின் அவை அக் கோயில்களை எய்தின : கருடற்கும் கோயில் நம்பியால் எடுக்கப்பட்டதென்க. | (375) | | திவிட்டன் அவையில் புலவர்கள் வரலாறு கூறுதல் | 1506. | முரசுவீற் றிருந்ததிர் மூரித் தானைய னரசுவீற் றிருந்தனன் பின்னை யாயிடைக் கரைசெய்நீர்க் கருங்கடல் வேலி காவலற் குரைசெய்நூற் சரிதைகள் புலவ ரோதினார். | (இ - ள்.) முரசு - வெற்றி முரசம், வீற்றிருந்து - ஒழியாதே இருந்து, அதிர் - முழங்குகின்ற, மூரி - பெரிய, தானையான் - படையை உடைய திவிட்டநம்பி, அரசு வீற்றிருந்தனன் - அரியணை அமர்ந்து கோலோச்சுவானாயினன், பின்னை - அப்பால், ஆயிடை - அவ்வோலக்க மண்டபத்தே, கரைசெய் நீர்க்கருங் கடல்வேலி - அலைகளாலே முழங்குதலைச் செய்கின்ற கடலை வேலியாகவுடைய உலகத்தை, காவலற்கு - காவல் செய்கின்ற திவிட்ட வேந்தனுக்கு. புலவர் - நல்லிசைப் புலவர்கள் உரை செய் நூற் சரிதைகள் - புகழ்தற்குரிய மெய்நூல்களிலே கூறப்படும் வரலாறு களை, ஓதினர் - கூறுவாராயினர், (எ - று.) வெற்றிமுரசம் முழங்க அரசு வீற்றிருந்த நம்பிக்கு, புலவர்கள் நூற் சரிதைகள் ஓதினர் என்க. | (375) | | புலவர்கள் வாசுதேவர் வரலாறுரைத்தல் | 1507. | ஆதிநா ளரசிய னீதி யாங்கெடுத் தோதினார் புலவர்க ளோது மாயிடைத் | |
| | |
|
|