பக்கம் : 939 | | வாசுதேவர் குன்றெடுத்தமை கூறல் | 1509. | 1வன்றிறன் மலிபல தேவர் தம்மொடு சென்றவர் செற்றலர்ச் செகுத்துப் பின்னரே குன்றமொன் றெடுத்தலுங் 2கொண்டு கூறினார் பொன்றலில் புராணநூற் புலவ ரென்பவே. | (இ - ள்.) வன் திறல் மலி - வலிய ஆற்றல் மிக்க, பலதேவர் தம்மொடு - பல தேவரோடு, சென்றவர் - சென்ற வாசுதேவர், செற்றலர்ச்செகுத்து - தம் பகைவராகிய பிரதிவாசுதேவர் முதலியோரை வென்று, பின்னரே - அதன்பின்னர், குன்றம் ஒன்று எடுத்தலும் - ஒருமலையைத் தூக்கிய வரலாற்றினையும், கொண்டு - புராணத்தினின்றும் மேற்கொண்டு, கூறினார் - திவிட்டனுக்குக் கூறினார்கள், பொன்றலில் - அழிதலில்லாத, புராண நூற் புலவர் - புராணம் கூறுதலில் வல்ல நல்லிசைப் புலவர்கள், என்பவே - என்று அறிஞர் கூறுவர், (எ - று.) வலிய திறலுடைய பலதேவருடன் சென்று பிரதிவாசுதேவரைக் கொன்றருளிய பின்னர்க் குன்றமெடுத்த வரலாறுண்மையையும் புலவர் புராணத்தினின்றும் எடுத்துக் கூறினர், என்க. | (379) | | திவிட்டன் செருக் கொழிதல் | 1510. | ஆங்கவர் மொழிதலு மருங்க லக்குழாம் மீங்கிவை யென்னினு முன்ன மெய்தினார் வாங்குநீர் மணலினும் பலர்கொ லோவென வீங்கிய செலுக்கிலன் வீர னாயினான். | (இ - ள்.) ஆங்கு - அவ்வாறு, அவர் மொழிதலும் - அப்புராணம் வல்ல புலவர் எடுத்துக் கூறியவுடன், அருங்கலக்குழாம் - எழுவகை அருங்கலத் தொகுதி, ஈங்கு இவை - இவ்விடத்தே உளவாகிய இவையிற்றை, என்னின் முன்னம் - யான் எய்துதற்கு முன்னரும், எய்தினார் - அடைந்தோர்கள், வாங்குநீர் மணலினும் - வளைந்தகடல் நீராற்றொகுக்கப்பட்ட மணலைக்காட்டினும், பலர் கொலோ - பலர் இவ்வுலகில் பண்டிருந்தனரோ, என்று - என்று கூறி, வீரன் - திவிட்டன், வீங்கிய செருக்கிலன் - பெருகிய இறுமாப்பில்லாதவனாய், ஆயினான் - அமையலாயினன், (எ - று.) | |
| (பாடம்) 1 மன்றலில் புகழ். 2கொணர்ந்து. | | |
|
|