பக்கம் : 947 | | அந்திமாலையிற் றோன்றும் திங்களை ஒத்த முத்துமாலைகளால் அழகு செய்யப்பட்ட வெண்குடை நீழலிலே மகிழ்ந்து வாழும் அந்நாட்டு மக்களாகிய கடல்போன்ற கூட்டம் நம்பியை எதிர்கொண்டு சூழ்ந்ததென்க. | (393) | | 1524 | மையார் சென்னி மாளிகை முன்றின் மலர்மேயும் மையார் பொய்கைத் தண்புன னாடன் வரலோடும் மையார் கண்ணி னாம்பய மெல்லா மடவாரிம் மையா மின்றே யெய்தின மென்றே மகிழ்வுற்றார். | (இ - ள்.) மை ஆர் சென்னி - முகில்கள் பொருந்திய சிகரங்களையுடைய, மாளிகை முன்றில் - மாளிகையின் முற்றத்தின்கண், மலர் மேயும் - மலர்கள் பொருந்திய, மை ஆர் - கரு நிறமமைந்த, பொய்கை - வாவிகளையுடைய, தண் புனல் நாடன் - குளிர்ந்த நீர்நாடனாகிய திவிட்டநம்பி, வரலோடும் - வந்தெய்திய உடனே, மடவார் - மகளிர்கள், இம்மை - இப்பிறப்பிலேயே இன்றே - இற்றைநாளில், மையார் கண்ணின் ஆம் - மையூட்டப்பெற்ற நம் கண்களால் யாம் பெறலாகும், பயம் எல்லாம் - இன்பம் அனைத்தும், யாம் - நாம், எய்தினம் - பெற்றடைந்தோம், என்றே - என்று இயம்பி, மகிழ்வுற்றார் - மகிழ்ந்தனர், (எ - று.) மாளிகையின் முற்றங்களிலே மலர் நிறைந்த பொய்கைகளையுடைய, புனனாடனாகிய நம்பி வந்தவுடன், அவன் திருமேனி எழிலிலே வீழ்ந்த கண்ணையுடைய மடவார், யாம் இன்று இம்மையிலேயே கண் பெற்றதற்குரிய பயன் முழுதும் எய்தினோம் என்று கூறி மகிழலாயினர் என்க. | (394) | | 1525. | ஆம்பன் னாணுஞ் செந்துவர் வாயா ரமிர்தூறி யாம்பன் னாணுந் தேமொழி நல்லா ரலர்தூவி யாம்பன் னாணும் விட்டன ரார்வக் களிகூர வாம்பன் னாணும் பல்புக ழானந் நகர்புக்கான். | (இ - ள்) ஆம்பல் நாணும் - அரக்காம்பல் நிறமொவ்வோமென்று நாணுதற்குக் காரணமான, செந்துவர் வாயார் - செவ்விய பவளம்போன்ற வாயினையுடையவரும், அமிர்து ஊறி - அமிழ்தின் சுவையைத் தோற்றுவித்து, ஆம்பல் நா ணும் - ஆம்பற் குழலும் இனிமையின் ஒவ்வேன் என்று நாணுதற்கு ஏதுவாய, தேம் மொழிய - இனிமையுடைய மொழியையுடைய, நல்லார் - இளமகளிர்கள், அலர்தூவி - மலர்களைச்சிதறி, ஆம்பல் நாணும் விட்டனர் - தமக்குரித்தாகிய பலவாகிய நாணங்களையும் | |
| | |
|
|