பக்கம் : 948
 
     விட்டவர்களாய், ஆர்வக் களிகூர - காட்சி அவாவுற்றுக் கண்டு மகிழா நிற்ப;
ஆம்பல் நாணும் பல் புகழான் - ஆம்பல் என்னும் பேரெண்ணும் நாணும்படி விரிந்த
பலவாகிய புகழையுடைய திவிட்டநம்பி, அந்நகர் புக்கான் - அந்தப் போதன நகரத்தே
புகுந்தான், (எ - று.)

     ஆம்பற்பூ நாணுதற்குரிய அழகிய செவ்வாயினையும், ஆம்பற்குழல் நாணுதற்குரிய
இனிய மொழியினையும் உடைய மகளிர்கள், தங்கட்கு உரியவாம் நாணங்களை
விட்டவராய்த் தன்னைக் கண்டு மகிழாநிற்ப நம்பி நகர்புக்கான் என்க.

     ஆம்பல் - ஒரு பேரெண். அது நாணுதற்குக் காரணம் நம்பியின் புகழ் தன்
என்லையும் கடந்தமை என்க.

 (395)

 
 
1526. தாமரை நாறுந் தண்பணை யெல்லா மகிழ்நாறச்
சாமரை வீசத் தாழ்குழை செம்பொன் சுடர்வீசத்
தேமரை யாளுஞ் சேயிழை யாளுந் திருமாலும்
பூமரை வேலிப் போதன மென்னுந் நகர்புக்கார்.
 
     (இ - ள்.) தாமரை நாறும் - தாமரை மலரின் மணங்கமழும், தண்பணை எல்லாம் -
குளிர்ந்த கழனிகள் எல்லாம், மகிழ் நாற - மகளிர் சூடிய மகிழ மலர் மணங்கமழா நிற்ப,
சாமரை வீச - இளமகளிர்கள் வெண்கவரி இரட்டா நிற்ப, தாழ்குழை செம்பொன் சுடர்வீச
- தொங்குகின்ற தோடுகளும் குண்டலங்களும் செம்பொன் ஒளிபரப்ப, தேம் மரையாளும் -
தேன் பொருந்திய செந்தாமரை மலரின்கண் வீற்றிருக்கும், சேயிழையாளும்- திருமகளாகிய,
சுயம்பிரபையும், திருமாலும் - திவிட்டநம்பியாகிய திருமாலும், பூமரைவேலிப்
போதனமென்னும் - தாமரைப் பூங்காட்டை வேலியாகவுடைய போதனம் என்று சிறப்பித்துக்
கூறப்படுகின்ற, நகர் புக்கார் - கோநகரத்திலே புகுந்தனர், (எ - று.)

     தாமரை மணம் கமழும் பணையெல்லாம் மகிழ்நாற என்றமையால் மகளிரின் மிகுதி
கூறிற்று, குழை நம்பிக்கும் நங்கைக்கும் பொதுவினுரைத்தலிற் றோடும் குண்டலமும் என்க.
நம்பியும் நங்கையும் நகர் புக்கனர் என்க.

 (396)

 
போதன நகரம் அணி செய்தல்
வேறு
1527 முன்வாயின் முகமெல்லா முத்தடுத்துத்
     தாமரை வெண் முளைகள் பாய்த்தி
மின்வாய மணிக்கலசம் பொற்செந்நெற்
     கதிர்சூட்டி விளங்க வைத்துப்