பக்கம் : 949
 
  பொன் 1வாழை மரகதப்பைங் கமுகொடுதோ
     ரணம்வாயில் புணர நாட்டி
மண்வாயிவ் வளநகரார் மணிமாலை
     தொடர்ந்தொலிப்ப வகுத்தா ரன்றே.
 
     (இ - ள்.) முன் வாயில் முகம் எல்லாம் - தலை வாயிலின் முகப்புத் தோறும், முத்து
அடுத்து - முத்தங்களை மணலாகப் பரப்பி, தாமரை வெண்முளைகள் பாய்த்தி -
தாமரைப்பூ வடிவினவாகிய வெள்ளிய முளைப்பாலிகைகளைப் பதித்து, மின்வாய
மணிக்கலசம் - ஒளியுடைய வாயமைந்த மணிகள் அழுத்திய குடங்களிலே, பொன்
செந்நெல் கதிர் சூட்டி - பொன்னிறமுடைய செஞ்சாலி நெற்கதிர்களை சூட்டி, விளங்க
வைத்து - திகழும்படி வைத்து, பொன்வாழை - பொன்னாலியன்ற வாழை மரங்களையும்,
மரகதப் பைங்கமுகொடு - மரகத மணியாலியன்ற பசிய கமுகுகளையும், தோரணம் -
மாவிலைத் தோரணகம்பங்களையும், வாயில் புணர நாட்டி - அத்தலைவாயிலிலே பொருந்த
நட்டு, மன்வாய் இவ்வள நகரார் - அரசன் வதிகின்ற கோநகரமாகிய இப்போதன நகரத்தே
வாழும் மாந்தர்கள், மணிமாலை தொடர்ந்து - மணியாலியன்ற மாலைகளையும் தொடுத்து
ஒலிப்ப - ஆரவாரமிகும்படி, வகுத்தார் அன்றே - ஒப்பனை செய்தனர், அன்று, ஏ: அசை,
(எ - று.)

     வளநகரார், முத்தடுத்து முளைகள் பாய்த்திப், பொற்குடங்களிலே நெற்கதிர் சூட்டி
விளங்கவைத்து, பொன்வாழை மரகதக் கமுகொடு தோரணம் நாட்டி, மணிமாலை தொடுத்து,
ஆரவாரத்தோடே, நகரை அணி செய்தனர் என்க.

(397)

 
 

திவிட்டனை நகரம் எதிர்கொள்ளல்

1528. சூழிணர்மென் மல்லிகையும் வளையமுமின்
     சூட்டுமெழி றுதையச் சூட்டி
யாழகவி மணிவண்டு மணிஞிமிறு
     மதுகரமு மிசைப்பச் செய்ய
காழகிலு நறுஞ்சாந்துங் கடிவாசப்
     பூப்பொடியுங் கமழ்ந்து கைபோய்
ஏழுலகு மணங்கொடுப்ப வெழினகரா
     ரெதிர்கொள்ள விறைவன் புக்கான்.
 
 

     (பாடம்) 1 பாளை மரகதப்.