(இ - ள்.) சூழ் இணர் மென் மல்லிகையும் - ஆராய்ந்தெடுத்த மெல்லிய மல்லிகை மலரின் கொத்தாலியன்ற மாலைகளையும், வளையமும் - வளையல்களையும், மின்சூட்டும் - மின்னும் நெற்றிப் பட்டங்களையும், எழில் துதைய - அழகு பெருக, சூட்டி - அணிந்து கொண்டவராய், யாழ் அகவி - யாழ்இசை போலே பாடி, மணிவண்டும் - நீலமணி போன்ற வண்டுகளும், அணிஞிமிறும் - அழகிய ஞிமிறுகளும், மதுகரமும் - மதுகரங்களும், இசைப்ப - இசையெழுப்பி, செய்ய காழ் அகிலும் - செவ்விய நிறமுடைய அகிலிடு நறும்புகையும், நறுஞ்சாந்தும் - நறுமணங்கமழும் சந்தனமும், கடிவாசப்பூம் பொடியும் - மிக்கமணமுடைய பொடிகளும், கமழ்ந்து - நறுமணம் கமழ்ந்து, கைபோய் - மிக்குச்சென்று, ஏழுலகும் மணங்கொடுப்ப - மேலேழுலகத்தும் நாறா நிற்ப, எழில்நகரார் - அழகிய நகர்வாழ் மாந்தர், எதிர்கொள்ள - எதிர்கொண்டு வரவேற்ப, இறைவன் புக்கான் - மன்னனாகிய திவிட்டன் நகரத்தே புகுவானாயினன், (எ - று.) வண்டும் ஞிமிறும் மதுகரமும் - தேன் வண்டுகளின் வகைகள். காழ் - வயிரமுமாம். மல்லிகையும் வளையலும் சூட்டும் சூட்டி அகவி இசைப்ப மணங்கொடுப்ப நகரார் எதிர்கொள்ள நம்பி புக்கான் என்க. |
(இ - ள்.) கோபுரமும் கழிந்து - தலைவாயிற் கோபுரவாயிலையும் கடந்து உட்சென்று, குளிர்நகரை - மகிழாநின்ற போதன நகரத்தை, வலங்கொடு - வலங்கொண்டு, வீதி - வீதியிடத்தே, குடையோன் செல்ல - திங்கள் வெண்குடைத்திவிட்டன் செல்லா நிற்ப, நூபுரமும் - காலணிகலனும், மேகலையும் - மணிமேகலை அணியும், கலந்து ஒலிப்ப - கூடி முழங்கவும், நுண்மருங்குல் நுடங்க - நுண்ணிய இடை துவளவும், வேய்புரையும் மென்பணைத்தோள் - மூங்கிலை ஒத்த மென்மையுடைய பருத்த |