பக்கம் : 953
 

     (இ - ள்.) உரல்கால - உரலைப் போன்ற கால்களையுடைய, முறம் செவிய -
முறத்தைப் போன்ற செவிகளையுடைய, ஓங்கு எருத்தின் - உயர்ந்த பிடரினையும், ஓடை -
முக படாத்தையும் உடைய, மால் - பெரிய, யானைமேல் - யானையின் மேலே, ஒளிசூழ்
மாலை - ஒளி பரப்பும் மாலையணிந்த, நிரல் கால - வரிசையாக அமைந்த
கால்களையுடைய, மணி நிரைத்த - மணிமாலைகளால் ஒழுங்குபடுத்திய,

     நெடுங்குடையின்கீழ் - நீண்ட குடையின் நீழலிலே அமர்ந்து, முடிநிழற்ற -
முடிக்கலன் ஒளி வீச, நெடுமால் பின்னே - திருமாலாகிய திவிட்ட நம்பியின் பின்னர், சரற்
கால சந்திரன் - கார்ப்பருவத்து முழுவெண்டிங்கள், தடவரைமேல் - பெரிய மலையின்
உச்சியிலே, வெண் முகிற் கீழ்த் தயங்கி ஆங்கு ஏ - வெண்மை நிறமுடைய மேகத்தின்
கீழே ஒளிர்ந்தாற் போன்று, வருநன் - வருகின்றவனாகிய, அலர் தாரான் -
மலர்மாலையணிந்த, மற்றவன் - விசயனுடைய, சீர் - சிறப்பையும், அரக்காம்பல் வாயினிர் -
செவ்வல்லி மலரை ஒத்த வாயையுடைய தோழியீர், காண்மின் - பாருங்கோள், (எ - று.)

     ஆம்பல் வாயினிர்! மால்யானை எருத்தின்மேல், மணி நிரைத்த நெடுங்குடைக்கீழ்,
கார்கலத்துத் திங்கள் ஒரு கரிய மலையின்மேல் வெளிய முகிலின்கீழிருந்து, திகழ்ந்தாற்
போன்றுவருகின்ற மூத்த நம்பியின் அழகினையும் காணுங்கோள்; என்றார். என்க.

(402)

 
 
1533. சேதாம்பல் வீழ்ந்தனைய செவ்வாயுஞ்
     செங்குவளை திளைத்த கண்ணு
மீதார்ந்த வெண்ணிலாச் சுடரொளியும்
     வெள்ளிக்குன் றனைய தோளும்
போதார்ந்த கருங்குஞ்சி மணிதொடர்ந்தாற்
     போற்புறந்தாழ்ந் திருண்ட வாறுங்
காதார்ந்த குழைதாழக் கதிருமிழ்ந்த
     திருமுகத்தின் கதிர்ப்புங் காண்மின்.
 
     (இ - ள்.) சேதாம்பல் வீழ்ந்தனைய - அரக்காம்பல் மலர் சாய்ந்தாற் போன்ற,
செவ்வாயும் - சிவந்த வாயினது அழகையும், செங்குவளை திளைத்த கண்ணும் -
செங்கழுநீர் மலரை ஒத்த திருக்கண்களின் அழகையும், மீதார்ந்த வெண்ணிலாச் சுடர்
ஒளியும் - திருமேனியின் மேலே பொருந்திய வெள்ளிய நிலா வொளியை ஒத்த ஒளியின்
அழகையும், வெள்ளிக் குன்றனைய தோளும் - வெள்ளிமலையை ஒத்த தோளின்
அழகையும், போது ஆர்ந்த - மலர் பொதுளிய, கருங்குஞ்சி - கரிய தலைமயிர், மணி