பக்கம் : 954 | | தொடந்தாற்போல் - நீலமணியைத் தொடக்கினாற்போலே, புறந்தாழ்ந்து - பிடரிலே வீழ்ந்து, இருண்டவாறும் - இருண்டு தோன்றும் அழகையும், காதார்ந்த - செவிகளிலே பொருந்திய, குழைதாழ - குண்டலங்கள் தூங்குதலாலே, கதிர் உமிழ்ந்த - அக் குண்டலங்கள் கான்ற ஒளிதவழப்பெற்ற, திருமுகத்தின் - திருமுகத்தின், சுதிர்ப்பும் - ஒளி அழகையும், காண்மின் - காணுங்கோள், (எ - று.) ஆம்பல் வாயினர்! மூத்த நம்பியின் வாயும், கண்ணும், மேனி ஒளியும், தோளும் குஞ்சி புறந்தாழ்ந்து இருண்டவாறும், திருமுகத்தின் பொலிவும் காணுங்கோள் என்றார், என்க. | (403) | | சுயம்பிரபையின் தோற்றப் பொலிவு | 1534. | வேய்காயு மென்பணைத்தோள் வெண்செந் தனமெழுகி முத்தந் தாங்கி ஏகாய மிட்ட வெண்டுகிலின் மகளி ருழைநின் றேத்த ஆகாய மியல்கின்ற வருமணிநல் விமானத்தி னகத்தாள் போலு மாகாய வரையாளு மன்னர்கோன் மடமகளை வம்மின் காண்போம். | (இ - ள்.) வேய் காயும் - மூங்கிலைச் சினக்கின்ற, மென்பணைத் தோள் - மென்மையுடனே பருத்த தோள்களிடத்தே, வெண்சந்தனம் மெழுகி - வெள்ளிய சந்தனக் குழம்பைப் பூசி, முத்தந் தாங்கி - முத்தமாலைகளைச் சுமந்துகொண்டு, ஏகாயம் இட்ட வெண் துகிலின் மகளிர் உழை நின்று ஏத்த - உத்தரீயம் இட்டவராய், வெள்ளாடை உடுத்த ஏவன் மகளிர்கள் பக்கத்தே நின்று வாழ்த்தா நிற்ப, ஆகாயம் இயல்கின்ற - விசும்பிடத்தே இயங்குகின்ற, அருமணி நல்விமானத்தின் - பெறற்கரிய மணிகளால் ஒப்பனை செய்யப்பட்ட விமானத்தின், அகத்தாள் போலும் - உள்ளே வீற்றிருக்கின்றாள் போலும், மாகாயவரை ஆளும் - பெரிய உருவத்தையுடைய மலைகளை ஆட்சி செய்யும், மன்னர்கோன் - சக்கரவர்த்தியாகிய சடியினது, மடமகளை - இளமையுடைய மகளாகிய சுயம்பிரபையை, காண்பாம் - சென்று காண்போம், வம்மின் - தோழிகளே வாருங்கோள், (எ - று.) | |
| | |
|
|