பக்கம் : 959
 
     கந்தாரம்: குறுக்கல் விகாரம்; காந்தாரம் என்னும் பண் என்க. வீக்கி - விசைத்து.
நந்தவனம் - நந்தா அவனம் என அளபெடுத்தது.

     நந்தவனத்தே, கமழுங் காலையில், இளையார் வருடி எழுப்பும் நரம்பினும் இனிய
சொல்லையுடைய சுயம்பிரபையின் தாமரைத் திருவடியின் அழகு இவ்வாறாயின் இவள்
தெய்வமகளே ஆம் என்றார் என்க.

 (409)

 

களி யாட்டம்

வேறு

1540. இன்னன பலவுங் காட்டி
     யிளையவர் காணும் போழ்தின்
மன்னவ 1ர் மன்னர் தம்மேன்
     மாலையு மலருஞ் சிந்தி
2மின்னவிர் சிவிறி தம்மால்
     விரைபொழி தாரை வீக்கித்
தொன்னக ரார்வ மென்னுங்
     களித்தொழி றொடக்கிற் றன்றே.
 
     (இ - ள்.) இன்னன - இவை போல்வன, பலவும் காட்டி - பற்பல அழகையும்
எடுத்துக் கூறி, இளையவர் - இளமகளிர்கள், காணும் போழ்தில் - உலாக் காட்சியைக்
கண்டு மகிழும்போது, மன்னவர் - அரசர்கள், மன்னர் தம்மேல் - ஏனைய அரசர் மேலே,
மாலையும் மலரும் சிந்தி - மலர் மாலைகளையும் விடுபூக்களையும் வீசியும், மின்னவிர்
சிவிறி தம்மால் - ஒளிர்கின்ற துருத்திகளாலே, விரை பொழி தாரை வீக்கி - மணங்கலந்த
நீர்த்தாரைகளை வீசியும் வர இவ்வாற்றால், தொன்னகர் - பழைதாகிய போதன நகரம்,
ஆர்வம் என்னும் - வெற்றியால் விளைந்த விழைவு என்கிற, களித்தொழில் -
களியாட்டமாகிய தொழிலை, தொடங்கிற்று அன்றே - ஆடத் தொடங்கியது; அன்று, ஏ:
அசை, (எ - று.)

     மகளிர்கள் ஒருவர்க் கொருவர் இவ்வாறு திருவுலாக் காட்சியைக் காட்டி
மகிழும்போது வெற்றியாலே களிப்புற்ற அரசர்கள், தம்முள் மாலையும் மலரும் சிந்தி,
தாரை வீக்கியும்வர, இவ்வாறு, தொன்னகரத்தே களியாட்டம் தொடங்கிற் றென்க.

 (410)

 
1541. செம்பொன்செய் பொடியி னாலுஞ்
     சிவிறியின் றாரை யாலு
மம்பொன்செய் மலரி னாலு
     மகிற்புகை யாவி யாலும்
பைம்பொன்செய் பதாகை யாலும்
     பரந்திருள் பட்ட வீதி
கம்பஞ்செய் யானை யானைக்
     கண்விளக் குறுத்த வன்றே.
 
 

     (பாடம்) 1 ரரசர் தன்மேல். 2மின்னவில்.