பக்கம் : 961 | | | கூடுவார் கொற்றங் கொள்ளக் கூறுவா ராகி யெங்கு மூடுபோக் கரிய தாக வொளிநக ருழையர் சூழ்ந்தார். | (இ - ள்.) ஆடுவார் - களிப்பாலே கூத்தாடுவார், அணங்கு கொள்வார் - அணங்காடுவார், ஆர்வம் செய் கருவி வீக்கி - தாம் விரும்பும் இசைக் கருவிகளைத் திருத்திக்கொண்டு, பாடுவார் - இசை பாடுவார், கூறி்ப் பரவுவார் - புகழ்கூறி ஏத்துவார், பணிந்து முன்னால் கூடுவார் - திவிட்டனை வணங்கி அவன் முன்னர்க் கூடுவர், கொற்றங் கொள்ளக் கூறுவார் - வேந்தே நீ வெல்க என வாழ்த்துவார், ஆகி - இவ்வாறாகி, எங்கும் - எவ்விடத்தேயும், ஊடுபோக்கு அரிது ஆக - உள்ளே போதற்கு அரிதாக, ஒளிநகர் உழையர் - புகழுடைய போதன நகரத்துப் பணியாளர்கள், சூழ்ந்தார் - குழீ இயினர், (எ - று.) நகரத்துப் பணிமக்கள் ஆடுவார், அணங்கு கொள்வார், பாடுவார், பரவுவார், கூடுவார், கூறுவாராகி எங்கும் ஊடுபோதற் கியலாதபடி சூழ்ந்தனர் என்க. அணங்கு கொள்ளுதலாவது - தெய்வமேறப்பெற்றாற் போன்று ஆடுதல். | (413) | | | 1544. | ஞாயிறு மறைதல் அங்குலாங் கொடியி னாலு மகிற்புகை யாலு மெங்கு 1மங்குலாய் விசும்பு மூட மழுங்கிய சுடர னாகி இங்குலா விளங்க மாட்டே னினியென வெண்ணி வெய்யோன் கொங்குலாங் குளிர்கொள் சோலைக் குடவரைக் குவடு சேர்ந்தான். | (இ - ள்.) அங்கு உலாம் கொடியினாலும் - அந்நகரத்தே அசைகின்ற கொடிகளாலும், அகிற்புகையாலும் - அகிலாலாய மணற்புகையாலும், எங்கும் - யாண்டும், மங்குல் ஆய் - இருள் தோன்றி, விசும்பு மூட - வானத்தை மறைத்திட, வெய்யோன் - கதிரவன், மழுங்கிய சுடரனாகி இவையிற்றால் ஒளி மழுங்கியவனாய், இங்கு - இவ்வானத்தே, உலா - இயங்கி, விளங்கமாட்டேன் - ஒளிரவியலாதவன் ஆயினேன், என எண்ணி - என்று கருதி, கொங்கு உலாம் - மணம் பரவுகின்ற, குளிர்கொள் சோலை - குளிர்ந்த பொழிலையுடைய, குடவரை - மேலைமலையின், குவடு சேர்ந்தான் - உச்சியை அடைந்தான், (எ - று.) |
| (பாடம்) 1 மங்குல்வாய். | | |
|
|