பக்கம் : 962 | | கொடியாலும், புகையாலும், இருண்டு விசும்பு மறைபட, வெய்யோன் இனி இங்கு இயங்க வியலாது என்று எண்ணி, சோலையினையுடைய குடவரைக் குவட்டை எய்தினான் என்க. | (414) | | 1545. | மணிவரை யரசன் மற்றை வாழ்நகர்க் கோயில் புக்கான் பணிவரை யுழைய ராகிப் பயாபதி பக்க நின்றார் தணிவரை யிலாத செய்கைத் தத்தமக் கியன்ற கோயி லணிவரை யனைய திண்டோ ளருக்கனோ டரசர் சேர்ந்தார். | (இ - ள்.) மணிவரை அரசன் - அழகிய மலையரசனாகிய சடிவேந்தன், மற்றை வாழ்நகர்க் கோயில் புக்கான் - தான் வதிகின்ற அரண்மனையை எய்தினான், பணிவரை உழையர் ஆகி - தனது கட்டளை எல்லைக்கண் நின்று பணிசெய்யும் ஏவலர்களாய், பயாபதி பக்கம் நின்றார் அரசர் - பயாபதியின் மருங்கே நின்ற அரசர்கள், தணிவரையிலாத செய்கை - குறைவற்ற பெருஞ்செயல்களாலே இயற்றப்பட்ட, தத்தமக்கு இயன்ற கோயில் - அவரவர்களுக்கென இயற்றப்பட்ட இல்லங்கட்கு, அணிவரை அனைய திண்டோள் அருக்கனோடு சேர்ந்தார் - அழகிய மலை போன்ற திண்ணிய தோளையுடைய அருக்ககீர்த்தியோடே எய்தினர், (எ - று.) அப்பொழுது, சடி தனக்கென இயற்றப்பட்ட அரண்மனையை எய்தினான். பயாபதியின் ஏவல் கேட்டுச் செய்யும் எல்லைக்கண் நின்றவராய ஏனையரசரும் அருக்ககீர்த்தியோடே அவரவர் அரண்மனைக்கேகினர், என்க. | (415) | | திவிட்டன் சுயம்பிரபையின் விமானத்தை அடைதல் | 1546. | மஞ்சுடை மாடக் கோயில் வளைவணன் புக்க பின்னைச் செஞ்சுடர் மகரப் பூணான் றிருவெதிர் கொள்ளச் சென்று விஞ்சையம் பாவை மேய விடைமணி விமானஞ் சேர்ந்தான் எஞ்சலில் செல்வந் தன்னா லிந்திர னிரட்டி யுள்ளான். | (இ - ள்.) மஞ்சு உடைமாடக் கோயில் - முகில் தவழ்தலுடைய நெடிய மாடங்களையுடைய தனது அரண்மனையின்கண், வளைவணன் - விசயன், புக்க பின்னை - சென்று புகுந்த பின்னர், செஞ்சுடர் மகரப்பூணான் - செவ்விய ஒளியையுடைய மகர கண்டிகையை உடைய திவிட்ட நம்பி, திருஎதிர்கொள்ளச் சென்று - மங்கலப் பொருள்கள் ஏந்தி மகளிர் எதிர் கொண்டழைக்கப் போய், விஞ்சை அம் பாவை மேய - விச்சாதர மகளாகிய சுயம்பிரபை இருந்த, விடைமணி விமானம் சேர்ந்தான் - மிக்க மணிகளை உடைய விமானத்தை எய்தினான், எஞ்சலில் செல்வந்தன்னால் - குறைவற்ற செல்வப் பேற்றாலே, இந்திரன் இரட்டி உள்ளான் - தேவேந்திரனையும் காட்டில் இருமடங்கு பெரியோன், (எ - று.) | |
| | |
|
|