பக்கம் : 963
 

     இந்திரனையும் காட்டில் இரட்டியுள்ள நம்பி, விசயன் கோயில் புக்க பின்னர், மகளிர்
மங்கலப் பொருளோடே எதிர்கொண்டழைப்பச் சென்று, சுயம்பிரபையிருந்த விமானத்தை
எய்தினான், என்க.

(416)

 

சுயம்பிரபைக்குக் “கோப்பெருந்தேவிÓ என்னும்
பட்டம் வழங்க முரசறைதல்

1547. மாலையாங் கடைந்த போழ்தின்
     மங்கலத் தேவிப் பட்டங்
காலையா மணிவ தென்று
     கண்ணதிர் முரசிற் சாற்றிப்
பாலையாழ் மழலை யாளைக்
     காப்பணி பயின்ற செல்வம்
வேலைசூ ழுலக மெல்லாம்
     விம்முற விளைந்த தன்றே.
 
     (இ - ள்.) மாலை ஆங்கு அடைந்த போழ்தின் - அந்தி மாலைப்போதின்கண்
அச்சுயம்பிரபையின் விமானத்தைத் திவிட்ட நம்பி எய்திய உடனே, மங்கலத் தேவிப்
பட்டம் - மங்கலச் செயல்களோடே சூட்டு மரபிற்றாகிய கோப்பெருந்தேவி என்னும்
பட்டத்தை, அணிவது - சுயம்பிரபைக்குச் சூட்டப் பெறுவது, காலைஆம் என்று - நாளை
விடியலிலே நிகழும் என்று கூறி, கண் அதிர் முரசிற் சாற்றி - கண்ணிடத்தே அதிர்ந்து
முழங்கும் முரசத்தை அறைந்து மாநகர்க்கு அறிவித்து, பாலை யாழ் மழலையாளை -
பாலைப்பண்ணை இசைக்கும் யாழ் போன்ற இனிய மழலைபேசும் சுயம்பிரபைக்கு, காப்பு
அணி பயின்ற செல்வம் - காப்பு அணி கட்டிய விழாவின் செல்வமாகிய துழனி, வேலைசூழ்
உலகம் எல்லாம் - கடல் சூழ்ந்த உலகமெங்கும், விம்முற - விம்மிதமுற்று மகிழும்படி,
விளைந்தது - நிகழ்ந்தது, அன்று, ஏ: அசை, (எ - று.)

     அந்திமாலைப் போதில் சுயம்பிரபையிருந்த விமானத்தை நம்பி எய்தியபின்,
மறுநாட்காலைநேரத்தே சுயம்பிரபைக்குத் தேவிப் பட்டம் சூட்டப்படும் என்னும் செய்தியை
நகர்க்கு முரசறைந்து அறிவிப்ப, தேவிக்குக் காப்புநாண் அணிவிழாத்துழனி அப்போதே
உலகம் விம்முற எழுந்தது என்க.

(418)

 
1548. அங்கொளி விளக்கி னாலு
     மணிகலச் சுடரி னாலுந்
திங்களை யனைய செல்வி
     திருநுத லொளியி னாலு
மங்கல 1மரபிற் றல்லா
     மயங்கிருண் மறைந்து போகக்
கங்குலு மெல்ல மெல்லக்
     கையகன் றிட்ட தன்றே.
 
 

     (பாடம்) 1 மரபிற் றெல்லா.