பக்கம் : 965
 
சுயம்பிரபைக்குக் கோப் பெருந்தேவி என்னும்
பட்டம் சூடுதல்
1550. விஞ்சைய ருலகு மண்ணும்
     விண்ணுமொன் றாய தேபோற்
செஞ்சுடர் மணியும் பொன்னு
     மாலையும் விரையுஞ் சேர்த்தி
யஞ்சுடர் வயிரப் பைம்பூ
     ணலைகடல் வண்ணன் றன்னாற்
பஞ்சுடை யல்குல் பாக
     வரசொடு பட்டங் கொண்டாள்.
 
     (இ - ள்.) விஞ்சையர் உலகும் மண்ணும் விண்ணும் ஒன்றாயதேபோல் - விச்சாதரர்
உலகமும் மண்ணுலகமும் தேவருலகமும் ஒன்றுபட்டாற்போன்று ஒருங்கே கூடாநிற்ப,
செஞ்சுடர் மணியும் பொன்னும் மாலையும் விரையும் சேர்த்தி - செவ்விய ஒளியுடைய
மணிகளையும், பொன் அணிகளையும் மாலையையும், நறுமணப் பொருள்களையும் கொண்டு
ஒப்பனை செய்யப் பெற்று, அம்சுடர் வைரப் பைம்பூண் - அழகிய வொளியுடைய வயிர
மணிகள் அழுத்திய பசிய அணிகலன்களையுடைய, அலைகடல் வண்ணன் தன்னால் -
திவிட்டநம்பியாலே, பஞ்சுடை அல்குல் - பஞ்சாலே நுண்ணிதின் இயன்ற ஆடையுடைய
அல்குற்றடத்தினளாகிய சுயம்பிரபை, பாக அரசொடு பட்டங்கொண்டாள் - அரசியலிலும்
பாதி உரிமை உடையதாகிய கோப்பெருந்தேவி என்னும் பட்டத்தை எய்தினள், (எ - று.)

     விஞ்சையரும், மண்ணுலகத்தாரும், தேவரும் ஒருங்கே கூடுதலின் “விஞ்சையர் உலகு
மண்ணும் விண்ணும் ஒன்றாயதேபோல்Ó என்றார்; ஒன்றாயதேபோல் ஒருங்கே கூட என
வருவித்துரைக்க. மணியும், பொன்னும், மாலையும், விரையும், சேர்த்தி அலைகடல்
வண்ணன் அளிப்பத் தேவி கொண்டாள் என்க.

 (420)

 
பாக அரசு - அரசுரிமையினும் பாதி, என்க:
1551. சடிமன்னனை இரதநூபுரத்
     திற்குச் செல்ல வழிவிடல்
தேவிதன் றாதைக் கேற்ற
     பெருஞ்சிறப்பி பியற்றிச் செல்வன்
வேய்விரி வெள்ளிக் குன்றின்
     விஞ்சைய ருலக மெல்லா
மோவில புகழி னானுக்
     குடன்கொடுத் துரிமை யோடும்
பூவிரி யுருவத் தாரான்
     பின்சென்று விடுத்துப் போந்தான்.