பக்கம் : 973 | | சுயம்பிரபை தான் வளர்த்த பாரிசாதத்திற்கும் காமவல்லிக்கும் மணம் செய்ய எண்ணுதல் | 1561. | அன்னண மியலு நாளு ளக்கிரத் தேவி தங்கோன் பொன்னணி யுலகின் வந்த பூவிரி பாரி சாத மன்னிய லரும்பு வைப்ப மற்றத னோடு சேர்த்திக் கன்னிய காம வல்லிக் கடிவினை காண லுற்றான். | (இ - ள்.) அன்னணம் இயலும் நாளுள் - அவ்வாறு செல்லா நின்ற நாளுள் வைத்து ஒருநாள், அக்கிரத்தேவி - முதன்மனைவியாகிய சுயம்பிரபை, தங்கோன் - தன் தந்தையாகிய சடிமன்னன், பொன்னணி உலகின் வந்த - அழகிய நாட்டினின்றும் கொணர்ந்து வந்த, பூவிரி பாரிசாதம் - அழகுவிரிகின்ற பாரிசாதம் என்னும் தேவதரு, மன்னியல் அரும்பு வைப்ப - வாடாமல் நிலைபெறுதலையுடைய அரும்பெடா நிற்ப, மற்று அதனோடு சேர்த்தி - அரும்பியதனை மணப்பருவம் அரும்பியதாய்க் கொண்டு அப்பாரிசாத மரத்தோடே பொருந்தக் கூட்டி, கன்னிய காமவல்லி - அதுகாறும் ஒன்றனோடும் புணராது கன்னிமையோடு நின்ற காமவல்லி என்னும் தெய்வக் கொடியினை, கடிவினை - மணத்தொழில் செய்விழாவினை, காணல் உற்றாள் - காண்டற்குப் பெரிதும் விரும்பினாள், (எ-று.) தங்கோன் - ஈண்டுச் சடிமன்னன். பாரிசாதம் என்னும் கற்பகத்துடனே, காமவல்லியை மணம் புணர்க்க விரும்பினாள் என்க. காமவல்லி - கற்பக மரத்தின்மேற் படர்வதொரு தெய்வக்கொடி. அக்கிரத் தேவி - முதன்மனைவி. இவ்வுலக அரும்புகள்போல் வாடாதே நிலைபெறும் தேவமலர் ஆகலின் “மன்னியலரும்பு“ என்றார். | (431) | | சுயம்பிரபை, பாரிசாத மணத்தினைத் திவிட்டற்கு அறிவிக்கத் தோழியை விடுதல் | 1562. | சுரும்பிவர் சோலை வேலித் துணர்விரி பாரி சாதம் அரும்பிய பருவச் செல்வ மடிகளுக் கறிவி யென்று 1பெரும்பிணா வொருத்தி தன்னைப் பெய்வளை 2விடுத லோடும் விரும்பினள் சென்று வேந்தற் கிறைஞ்சிவிண் ணப்பஞ் செய்தாள். | |
| (பாடம்) 1 பெரும் பெணாள். 2 விடுத்த. | | |
|
|