பக்கம் : 977 | | | நாடி நாடி 1ந னிநன்றென நக்கான் நீடு நீடு 2மு டியானெடி யானே. | (இ - ள்.) பாடு பாணி இலயம் பல தோற்றி - பாடுதற்குரிய தாளத்திலே பல்வேறு இலயங்களையும் தோன்றச்செய்து, ஆடிஆடி - பற்பல விதம்பட ஆடி, அசதித் தொழில் செய்ய, - நகைத்தற்குக் காரணமான தொழிலை இயற்ற, நீடுமுடியால் நெடியான் ஏ - நீண்ட முடியுடைமையில் பெரியோனாகிய திவிட்டனும், நாடி நாடி - ஆடுந்தோறும் சுவை தோன்றுமிடங்களை ஆராய்ந்து உணர்ந்து உணர்ந்து, நனி நன்று என - மிக நன்று மிக நன்று என்று அவ்வப்போது விளம்பி, நீடு நக்கான் - பெருகச் சிரித்து மகிழ்ந்தான், (எ - று.) பாடுகின்ற பொழுது தாளவகையாலே பலவேறு இலயங்களைத் தோன்றச் செய்து ஆடி ஆடி நகைப்பூட்டுந் தோறும், நம்பியும் அந் நுணுக்கங்களை நாடி நாடி நன்றுநன்றெனக்கூறி நக்கான் என்க. | (437) | | விதூடகன் வயிற்றைப் பற்றிக்கொண்டு தரையில் புரளுதல் | 1568. | காது கொண்டன கனபொற் குழைசோர மீது கொண்ட வடகம் புடை 3மேவ 4வாதி யாதிமு ழுகும்வயி றென்னாப் பூதி மீதுபு ரளாநரல் கின்றான். | (இ - ள்.) காதுகொண்டன கனபொன் குழைசோர - விகடன் தன் காதுகளிலே அணியப் பெற்ற கனவிய பொன் குண்டலங்கள் நழுவா நிற்பவும், மீதுகொண்ட வடகம் - மேனியிலே கிடந்த மேலாடை, புடைமேவ - ஒரு பக்கத்தே நெகிழ்ந்து போகவும், பூதிமீது புரளா - கீழேவீழ்ந்து புழுதியிலே புரள்வானாய், முழுகும் வயிறு - மோதகங்கள் முழுகப்பெற்ற என் வயிறே, வாதியாதி - என்னை வருத்தாதே கொள், என்னா - என்று கூறி, நரல்கின்றான் - புலம்புவான் ஆயினன், (எ - று.) வாதியாதி - வாதியாதே! வயிறு : விளி. வாதித்தல் - துன்புறுத்தல். அவ்வாறு ஆடுகின்றவன், புழுதியிலே விழுந்து குழைசோரவும், போர்வை நெகிழவும், வயிறே என்னை வருத்தாதே கொள்! என்று புலம்பினான் என்க. | (438) | | 1569. | மாத வன்வயி றுபற்றி நரன்றாற் கேத 5மென்னையெ 6ன வேந்தல் வினாவ | |
| (பாடம்) 1 நளிநன். 2 நெடுமுடி யானே. 3 சூழ. 4 ஊதி, ஊதி. 5 மென்னையே. 6 வேந்தன். | | |
|
|