பக்கம் : 977
 
நாடி நாடி 1ந னிநன்றென நக்கான்
நீடு நீடு 2மு டியானெடி யானே.
 

     (இ - ள்.) பாடு பாணி இலயம் பல தோற்றி - பாடுதற்குரிய தாளத்திலே பல்வேறு
இலயங்களையும் தோன்றச்செய்து, ஆடிஆடி - பற்பல விதம்பட ஆடி, அசதித் தொழில்
செய்ய, - நகைத்தற்குக் காரணமான தொழிலை இயற்ற, நீடுமுடியால் நெடியான் ஏ - நீண்ட
முடியுடைமையில் பெரியோனாகிய திவிட்டனும், நாடி நாடி - ஆடுந்தோறும் சுவை
தோன்றுமிடங்களை ஆராய்ந்து உணர்ந்து உணர்ந்து, நனி நன்று என - மிக நன்று மிக
நன்று என்று அவ்வப்போது விளம்பி, நீடு நக்கான் - பெருகச் சிரித்து மகிழ்ந்தான்,
(எ - று.)
  
     பாடுகின்ற பொழுது தாளவகையாலே பலவேறு இலயங்களைத் தோன்றச் செய்து
ஆடி ஆடி நகைப்பூட்டுந் தோறும், நம்பியும் அந் நுணுக்கங்களை நாடி நாடி
நன்றுநன்றெனக்கூறி நக்கான் என்க.

(437)

 
விதூடகன் வயிற்றைப் பற்றிக்கொண்டு
தரையில் புரளுதல்
1568. காது கொண்டன கனபொற் குழைசோர
மீது கொண்ட வடகம் புடை 3மேவ
4வாதி யாதிமு ழுகும்வயி றென்னாப்
பூதி மீதுபு ரளாநரல் கின்றான்.
 
     (இ - ள்.) காதுகொண்டன கனபொன் குழைசோர - விகடன் தன் காதுகளிலே
அணியப் பெற்ற கனவிய பொன் குண்டலங்கள் நழுவா நிற்பவும், மீதுகொண்ட வடகம் -
மேனியிலே கிடந்த மேலாடை, புடைமேவ - ஒரு பக்கத்தே நெகிழ்ந்து போகவும், பூதிமீது
புரளா - கீழேவீழ்ந்து புழுதியிலே புரள்வானாய், முழுகும் வயிறு - மோதகங்கள்
முழுகப்பெற்ற என் வயிறே, வாதியாதி - என்னை வருத்தாதே கொள், என்னா - என்று
கூறி, நரல்கின்றான் - புலம்புவான் ஆயினன், (எ - று.)

     வாதியாதி - வாதியாதே! வயிறு : விளி. வாதித்தல் - துன்புறுத்தல்.

     அவ்வாறு ஆடுகின்றவன், புழுதியிலே விழுந்து குழைசோரவும், போர்வை நெகிழவும்,
வயிறே என்னை வருத்தாதே கொள்! என்று புலம்பினான் என்க.

(438)

 
1569. மாத வன்வயி றுபற்றி நரன்றாற்
கேத 5மென்னையெ 6ன வேந்தல் வினாவ
 
 

     (பாடம்) 1 நளிநன். 2 நெடுமுடி யானே. 3 சூழ. 4 ஊதி, ஊதி.
5 மென்னையே. 6 வேந்தன்.