பக்கம் : 978 | | | ஊதி யூதிவ யிறுள்ளள வெல்லாம் மோத கங்கண் முழுகும்பல வென்றான். | (இ - ள்.) மாதவன் - அவ்விகடப் பார்ப்பனன் ஆகிய, வயிறுபற்றி நரன்றாற்கு - தன் வயிற்றைக் கையாற்பற்றிக் கொண்டு அழுவானை, ஏதம் என்னைஎன - நினக்குற்ற துன்பம்யாது என்று, ஏந்தல் வினாவ - திவிட்ட நம்பி வினவ, வயிறு உள் அளவெல்லாம் - வயிற்றினுள்ளிடமெங்கும், மோத கங்கள் - கொழுக்கட்டைகள், ஊதிஊதி - பருத்துப் பருத்து, பலமுழுகும் என்றான்- பற்பல முழுகுகின்றன என்று கூறினான், (எ - று.) நரன்றாற்கு : வேற்றுமை மயக்கம். ஊதுதல் - பருத்தல். நரன்றவனாகிய பார்ப்பனுக்கு உற்ற ஏதம் என்னை என வினாவ எனினும் ஆம். வயிறுபற்றிப் புலம்பிய மாதவனை உனக்குற்ற வருத்தம் என்னை என்று நம்பி வினாவினனாக. என் வயிற்றுள் மோதகங்கள் ஊதி ஊதி முழுகுகின்றன என்றான் என்க. | (439) | | | இதுவுமது | 1570. | என்று 1தின்றனை பன்மோ தகமென்ன என்று தின்றனவு மல்ல வினிப்போய்ச் சென்று தேவிக டிகாவின் விழாவில் நின்று தின்னலுறு கின்றன வென்றான். | (இ - ள்.) என்று தின்றனை பல் மோதகம் என்ன - அங்ஙனம் முழுகுமாறு பலவாகிய கொழுக்கட்டைகளை நீ எப்போது தின்றாய் என்று திவிட்டன் வினவ, என்று தின்றனவும் அல்ல - அரசே! இதற்குமுன் எப்போதாவது தின்னப்பட்டனவும் அல்ல அம்மோதகங்கள், இனிப்போய்ச் சென்று - இனிச்சென்று எய்தி, தேவி கடிகாவின் விழாவில் - கோப்பொருந் தேவியாரது பூம்பொழிலின் கண்ணே நிகழும் பாரிசாதகாமவல்லி மணவிழாவிலே, நின்று தின்னலுறுகின்றன - இருந்து யான் தின்னப் போகின்றனவே யாம், என்றான் - என்று இயம்பினான், (எ - று.) இவ்வாறு ஊதி ஊதி முழுகும் மோதகங்களை நீ எப்போது தின்றாய் என்று நம்பி விவை, இதற்குமுன் நான் கொழுக்கட்டைகள் தின்னவில்லை; இனிப்போய் மணவிழாவில் தின்பேன் அல்லனோ? அம்மோதகங்களே ஊதிஊதி முழுகுகின்றன என்றான் என்க. | (440) |
| (பாடம்) 1 தின்ற வெனைப்பல வென்ன. | | |
|
|