பக்கம் : 978
 
  ஊதி யூதிவ யிறுள்ளள வெல்லாம்
மோத கங்கண் முழுகும்பல வென்றான்.
 
     (இ - ள்.) மாதவன் - அவ்விகடப் பார்ப்பனன் ஆகிய, வயிறுபற்றி நரன்றாற்கு - தன்
வயிற்றைக் கையாற்பற்றிக் கொண்டு அழுவானை, ஏதம் என்னைஎன - நினக்குற்ற
துன்பம்யாது என்று, ஏந்தல் வினாவ - திவிட்ட நம்பி வினவ, வயிறு உள் அளவெல்லாம் -
வயிற்றினுள்ளிடமெங்கும், மோத கங்கள் - கொழுக்கட்டைகள், ஊதிஊதி - பருத்துப்
பருத்து, பலமுழுகும் என்றான்- பற்பல முழுகுகின்றன என்று கூறினான், (எ - று.)

     நரன்றாற்கு : வேற்றுமை மயக்கம். ஊதுதல் - பருத்தல்.

     நரன்றவனாகிய பார்ப்பனுக்கு உற்ற ஏதம் என்னை என வினாவ எனினும் ஆம்.
வயிறுபற்றிப் புலம்பிய மாதவனை உனக்குற்ற வருத்தம் என்னை என்று நம்பி
வினாவினனாக. என் வயிற்றுள் மோதகங்கள் ஊதி ஊதி முழுகுகின்றன என்றான் என்க.

(439)

 
 
இதுவுமது
1570. என்று 1தின்றனை பன்மோ தகமென்ன
என்று தின்றனவு மல்ல வினிப்போய்ச்
சென்று தேவிக டிகாவின் விழாவில்
நின்று தின்னலுறு கின்றன வென்றான்.
 
     (இ - ள்.) என்று தின்றனை பல் மோதகம் என்ன - அங்ஙனம் முழுகுமாறு
பலவாகிய கொழுக்கட்டைகளை நீ எப்போது தின்றாய் என்று திவிட்டன் வினவ, என்று
தின்றனவும் அல்ல - அரசே! இதற்குமுன் எப்போதாவது தின்னப்பட்டனவும் அல்ல
அம்மோதகங்கள், இனிப்போய்ச் சென்று - இனிச்சென்று எய்தி, தேவி கடிகாவின் விழாவில்
- கோப்பொருந் தேவியாரது பூம்பொழிலின் கண்ணே நிகழும் பாரிசாதகாமவல்லி
மணவிழாவிலே, நின்று தின்னலுறுகின்றன - இருந்து யான் தின்னப் போகின்றனவே யாம்,
என்றான் - என்று இயம்பினான், (எ - று.)

     இவ்வாறு ஊதி ஊதி முழுகும் மோதகங்களை நீ எப்போது தின்றாய் என்று நம்பி
விவை, இதற்குமுன் நான் கொழுக்கட்டைகள் தின்னவில்லை; இனிப்போய் மணவிழாவில்
தின்பேன் அல்லனோ? அம்மோதகங்களே ஊதிஊதி முழுகுகின்றன என்றான் என்க.

(440)


     (பாடம்) 1 தின்ற வெனைப்பல வென்ன.