பக்கம் : 982 | | கனிகளைப் பார்க்குந்தோறும், அவன் கண்கள் அவற்றிற் சென்று சென்று வீழவும், எயிறூறவும், அவையிற்றைப் பொறுக்கிக்கொண்டு வந்து குவிக்கின்றவன், நம்பியை நோக்கி இவற்றைக் காண்! யாம் இவற்றைத் தின்பேம்; என்றான் என்க. | (446) | | 1577. | .நல்ல வல்லகனி முன்னைய 1நாமிவ் வெல்லை செல்லவுறு மென்னலு 2மாயின் வல்லை வல்லைவரு வாயென முன்னால் ஒல்லை யொல்லையொலி பாடி நடந்தான். | (இ - ள்.) நல்ல அல்ல கனி முன்னைய - பார்ப்பனனே முன்னிடத்துளவாய இக்கனிகள் அத்துணை நல்லன அல்ல, நான் இ எல்லை செல்ல - யாம் இவ்வெல்லையைக் கடந்து சிறிது செல்லுமளவிலே, உறும் - ஆங்கு நறிய கனிகள் நனி கிடைக்கும், என்னலும் - என்று அரசன் கூறியவுடனே, ஆயின் - அவ்வாறாயின், வல்லை வல்லை வருவாய் என - அரசே விரைந்து விரைந்து வந்தருள்க என்று கூறி, முன்னால் - அரசனுக்கு முன்பு, ஒல்லைஒல்லை - விரைந்து விரைந்து, ஒலிபாடி நடந்தான் - இசை பாடிக்கொண்டு நடப்பானாயினன், (எ - று.) நம்பி, அக்கனிகளை நோக்கிப் பார்ப்பனனே! இவை நல்ல கனிகள் அல்ல; இன்னும் சிறிது தொலை செல்வேமாயில், ஆண்டு நல்ல கனிகள் உளவாம்; என்ன, பார்ப்பனன் அரசே! அங்ஙனமாயின், விரைந்து வந்தருள்க என்று விரைந்து பாடிச் சென்றான் என்க. | (447) | | 1578. | சந்து மாவொடு தடாயிட மெல்லாங் கொந்து தேனொடு குலாயிணர் கூடி வந்து தாழ்ந்துமது மாரி தயங்கித் தந்து தாதுபொழி யும்பொழி றானே. | (இ - ள்.) சந்து மாவொடு தடாய் - சந்தன மரங்கள் மாமரங்களோடே வளைந்து, இடம்எல்லாம் - அப்பொழிலிடம் எங்கும், கொந்து தேனொடு குலாய் - கூட்டமாகிய வண்டுகளோடே பொருந்தி, இணர்கூடி - பூங்கொத்துக்களும் தழைக் கொத்துகளும் மிக்கு, வந்து தாழ்ந்து - வளைந்து கீழே தணிந்து, மதுமாரி தயங்கி - தேன்மழை பொழிதலாலே விளக்கமுற்று, பொழில் தான் - அப்பொழில், தாதுதந்து பொழியும் - பூந்துகள்களை மிகுதியும் உதிர்க்கும், தான், ஏ : அசைகள், (எ - று.) தடாய் - வளைந்து. |
| (பாடம்) 1 நாமிவை. 2 மாயின. | | |
|
|