குளிர்ந்த பொழிலிடத்தே ஓடி மண்டி வரும் வேதியன் ஒரு புறத்தே சிறந்த கனிகன் உதிர்வன கண்டு அறியாமையாற் சினங்கொண்டான் என்க. சினத்தற்குக் காரணம் வருகின்ற செய்யுள்களிற் காண்க. மூடுகொண்ட மதி - அறியாமையுடையமதி. |
(450) |
|
விதூடகன் இப்பொழில் காவலில்லாதது எனல் |
1581. | ஏவ லின்றியெரி வெங்கதி ரோனும் போவ லென்றுநினை யாப்புனை கோயில் ஓவ லின்றியுடை யாய்சிறி தேனுங் 1காவ லின்றுகடி காவிது வென்றான். |
(இ - ள்.) ஏவல்இன்றி - உன்னுடைய ஏவல் பெற்றுச் செல்வதையன்றி, எரிவெங்கதிரோனும் - எரிகின்ற வெவ்விய ஒளியையுடைய ஞாயிறும், போவல் என்று - யாமே கடந்து செல்வேம் என்ற, நினையா - நினைவதில்லாத ஆணையமைந்த, புனைகோயில் - அழகுறுத்தப்பட்ட வலிய அரண்மனையை, ஓவல் இன்றி உடையாய் - ஒழிவின்றி உடையவனாகிய அரசனே, கடிகா இது - மணமிக்க இப்பூம்பொழில், சிறிதேனும் காவல் இன்று என்றான் - ஒருசிறிதும் காவல் அமைந்ததாகக் காணப்படவில்லை என்று கூறினான், (எ - று.) ஞாயிறும் உன்னுடைய ஆணையைக் கடந்து மேற்செல்ல அஞ்சும் அரண்மனையை உடைய அரசே உன்னுடைய பூம்பொழில் மட்டும் காவலற்றதாக இருக்கின்றதே! என்றான் என்க. |
(451) |
|
நம்பி விதூடகனை வினாதல் |
1582. | பொன்னி னாயபுரி சைத்தள மேலும் மன்னு வாளர்மற வோர்பலர் காப்பர் என்னை 2காவலிஃ தில்வகை யென்றான் மின்னு வார்ந்துமிளி ருஞ்சுடர் வேலோன். |
(இ - ள்.) மின்னு வார்ந்து மிளிரும் சுடர் வேலோன் - மின்னல் ஒழுகித் திகழ்கின்ற ஒளியுடைய வேலேந்திய திவிட்ட நம்பி, மன்னுவாளர் - கையிலே நிலைபெற்ற வாட்படையுடையராய், பொன்னின் ஆய புரிசைத்தளம் மேலும் - பொன்னாலியன்ற மதிலுறுப்பாகிய புரிசையின் மேற்றளத்தின்மேல் அமர்ந்து, மறவோர் பலர் காப்பர் - மறத்தன்மைமிக்க காவலர் பற்பலர் காவா நிற்பாராகவும், இஃது - இப்பொழில், காவல் இல்வகை என்னை - காவலிலதாய வகை யாது, என்றான் - என்று வினவினான், (எ - று.) |
|
|
(பாடம்) 1 காவினின்று கடி. 2 காவலிதுவில் வகை. |